Share

May 21, 2019

Full of Doubt


”எந்த கட்சியிலும் சேரமாட்டாய், கொள்கைகளே அபத்தம் என்கிறாய். ஜாதி சங்கத்திலும் ஈடுபட மாட்டாய். மதமும் முக்கியமில்லை. அடையாளங்கள் தேவையில்லை என்கிறாய்.
எனக்கு ஒரு பிரச்னையென்றால் என் கட்சி உடனே தலையிடும். போராட்டம் நடத்தியதை பார்த்தாய்.
தமிழ் நாட்டில் உள்ள நம் ஜாதி சங்கங்கள் ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்கிறது.
பார் கவுன்சில் கூட எனக்கு சப்போர்ட் ஆக களம் இறங்கியது. சென்னை, மதுரை உட்பட எல்லா ஊர் வழக்கறிஞர்களும் கிளர்ந்தெழுந்தார்கள்.
ஏதோதோ படிக்கிறாய். அது தான் உன்னை சமூகத்திலிருந்து எந்த அளவுக்கு அன்னியமாக்கி விட்டது பார். எல்லாவற்றையும் சந்தேகிக்கிறாய். எதன் மீதும் பரவச பிடிப்பில்லை. உனக்கு நடந்திருப்பது Alieanation.”
ஒரு பிரமுகர் என்னைப் பற்றி இப்படி 1996ல் ஆதங்கப்பட்டார்.

பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் சொன்னது தான் அப்போது ஞாபகத்திற்கு வந்தது.
The fundamental cause of the trouble in the modern world today is that the stupid are cocksure while the intelligent are full of doubt.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.