Share

Mar 13, 2019

ராகுலம்


ஸ்டெல்லா மாரிஸ்
Call me Rahul, not sir என்று ராகுல்காந்தி சொன்னவுடன் அந்த மாணவி வெட்கப்பட்டு நாக்கை நீட்டிய அழகு காட்சியின்பம்.
சற்று நிதானித்து “ ராகுல்” சொல்லி தன் கேள்விக்கிடையிலும்
“ ராகுல் “ என்று இழுத்து மீண்டும் கேள்வியை தொடர்ந்தது அற்புதம்.
எந்த சினிமாவிலும் காண முடியாத நேர்த்தியான காட்சி. ஆஹா.

நாகர்கோவில்
’சத்தியமேவ ஜெயதே’ என்று திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார் என்பது ராகுல் காந்தி சொல்லித் தான் தெரியும்.
என்னே என் அறிவின்மை! எனக்கிதுவே வெட்கமில்லாமல் வேறே வெட்கமில்லை.
'Mea culpa,Mea culpa,mea maxima culpa'
(மேயா குல்பா, மேயா குல்பா, மேயா மாக்சிமா குல்பா)
என் பாவமே என் பாவமே, என் பெரும்பாவமே
380 அறத்துப்பால் குறள்களில் ஒன்றிலாவது நிச்சயம் இதை சொல்லாமலா விட்டிருப்பார்?
சிந்தனை தெளிவடைந்தேன்.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.