Share

Feb 5, 2019

Carnal Thoughts - 45


புகழ் பூட்டு

மதுரை சென்ட்ரல் தியேட்டரை ஒட்டியுள்ள சந்தில் Sex work கொடி கட்டி பறந்து கொண்டிருந்தது. போலீஸுக்கு ’தன்னை’ய கட்டிட்டு Ex- sex worker கிழவி ஒருத்தி, அவள் பெயர் பாப்பு – தேன் சிட்டு, மான் கொம்பு, கன்னிப்பொண்ணு என்று சில குமரிகளை வைத்து தொழில் நடத்திக்கொண்டிருந்தாள். செங்கோடன் என்று ஒரு ஒரு செக்யூரிட்டி அந்த சந்து வீட்டில் வாசலில் அமர்ந்திருப்பான். சலம்பல் வந்தா சமாளிக்க.
பாப்பு கிழவியுடன் அளவளாவுவது அவளுடைய விடன், விடலை கஸ்டமர்களுக்கு சுவையான அனுபவம்.
தான் குமரியாய் இருந்த காலத்தில் மதுரைக்கு வந்த சில புகழ் பெற்ற பிரபலங்கள் தன்னை அணைஞ்சிருக்காங்கெ, பூட்டியிருக்காங்கெ என்று அவர்கள் பெயரையெல்லாம் சொல்வாள்.
ஏன் இப்போது ப்ரமோசனின் பாப்பு மாமாக்காரியாய் (Pimp) இருக்கும்போதும் இங்கே அவளுடைய Employeeகளை தேடி வரும், லாட்ஜுக்கு அழைத்துக்கொண்டு போகும் மதுரை, தமிழக பிரபலங்கள் பட்டியலையெல்லாம் கொடுப்பாள். ஒரு பழைய பிரபல நடிகை அந்தக்காலத்தில் தன்னுடைய ’கலீக்’ என்று சொல்வாள். அந்த பிரபல நடிகையை அணைஞ்சி பூட்டியிருக்கிற லோக்கல் சாமானிய சல்லிகளைப்பற்றி சொல்வாள்.
’யார் கண்டா? நாளைக்கே தேன் சிட்டு, மான் கொம்பு, கன்னிப்பொண்ணு கூட பிரபலமாகலாம். இதுக எல்லாமே சினிமா ஆசையில் தான் இருக்கு. மெட்ராஸ் போக காசு சேத்துக்கிட்டு இருக்குதுக.’
’புகழ் பூட்டு’ என்று ஒரு வெக்காபுலரியை இதை வைத்தே சப்பைக்காலன் உண்டாக்கியிருந்தான். ’நாளை தேன் சிட்டு பெரும் புகழ் எய்தி சினிமாபோஸ்டரில் வந்து சென்ட்ரல் தியேட்டரில் அவள் படம் ஓடும்போது நான் என் ’புகழ் பூட்டு’ பற்றி எல்லோரிடமும் பகர்வேன்.நான் பூட்டுன தாட்டி.’ என்று உருண்டை விழியன், குருவி மண்டையன் மார் தட்டி இரும்பூதெய்துவார்கள்.
இடியட் தாஸ், மண்டை மூக்கன், ஒத்த காதன் மூவரும் சென்ட்ரல் தியேட்டர் சந்துக்கு விஜயம் செய்த போது ஆளுக்கொரு ‘தாட்டி’ய Choose செய்யும் வேளையில் இடியட் தாஸ் Choice கிழவி பாப்பு. பாப்புவுக்கு வெட்கத்தால் முகம் சிவந்து விட்டது. “டேய், என்னடா முட்டாப்பயலே..நானாடா” நாணத்தோடு தவித்துப்போய் விட்டாள்.
இடியட் தாஸ் அவளை பூட்டிய அனுபவத்தை பின்னர் ஏ.ஏ. ரோட்டில் விவரித்தான். “ டேய், பாப்பு என் கிட்ட ’ஏ அய்யா, மாரப்புடி, என் மாரப்புடி, முலைய பிடிச்சி கசக்கு மாமு’ன்னு விரகதாபத்தில கத்தி தவிச்சாடா.. இது ஒரு ’புகழ் பூட்டு’டா. புகழ் பெற்ற மறைந்த மாமணிகள் பூட்டிய ஆரணங்கு பாப்புவை நான் அணைஞ்சது கூட ஒரு ’புகழ் பூட்டு’ தானேடா”
ஆரப்பாளையம் ரிக்ஷாக்காரன் ஆலமரத்தான் ஒல்லியாய் இருந்தாலும் பெயருக்கேற்ற உயரமானவன். ஆறடிக்கு மேல் உயரம். ஆம்புலஸ் என்று நினைத்து ஒரு போலீஸ் வேனை மறித்து நைஃப்பை ஓங்கி குத்தியவன். (’ரிக்ஷாவில் அவன் உட்கார்ந்து ஓட்டும்போது ரிக்ஷாவை ஒரு டைனோசர் இயக்குவது போலவே இருக்கும்’ என்று ரொம்ப பின்னால் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் படம் பார்த்தவுடன் மொட்டையன் டைனோசரை ஆலமரத்தானுடன் கனக்ட் செய்து நினைவு கூர்ந்திருக்கிறான்.)
ரிக்ஷாக்காரன் ஆலமரத்தான் தனித்தமிழில் பேச முயற்சிகள் மேற்கொள்பவன். ஆலமரத்தான் என்ன, அனைத்து சல்லிகளுமே தூய தமிழ் பிரயாசையில் இருப்பவர்கள் தான்.
ஆலமரத்தான் ஆரப்பாளையம் பார்க்கிற்குள் நுழைந்து கஞ்சா போதையில் மிதந்து கொண்டிருந்த தன் சக சல்லிகளை பார்த்து உருக்கத்துடன் அந்த திடுக்கிடும் தகவலை சொன்னான். “ நம்மையெல்லாம் இன்பத்தில் ஆழ்த்தி இமயத்தின் உச்சிக்கே கொண்டுக்குப்போன (கொண்டு போன என்ற வார்த்தையின் வட்டார வழக்கு. தூய தமிழில் இயல்பாக வட்டார வழக்கு வந்து விட்டது)  அருமை அம்மணி, மறைந்த மாமணிகளை பூட்டி மகிழ்ந்த கண்மணி, ’சென்ட்ரல் தியேட்டர்’ சந்து( சென்ட்ரல் தியேட்டர் என்ற மணிப்பிரவாளத்தில் தனித்தமிழ் முயற்சி வியர்த்தமாகி விட்டதே) சரித்திர புகழ் பெற்ற பொந்து ’பாப்பு’ அமரராகி விட்டார்.”
உடனே, உடனே அந்த இடத்திலேயே இடியட் தாஸ் தலைமையில் அமரர் பாப்பு விற்கு ஒரு இரங்கல் கூட்டம் நடந்தது.

குருவி மண்டையன் பாப்புவின் கோட்டையில் தான் மான் கொம்புவுக்கு நெம்புகோலின் தத்துவத்தை விளக்கி விட்டு எழுந்து அறை நீங்கி, பின்னர் செக்யூரிட்டி செங்கோடன் தன் சட்டையைப் பிடித்து இழுத்த போதும் வீட்டை விட்டு எப்படி எஸ்கேப் ஆக முடிந்தது? என்று விவரித்தான்.

 ஒச்சு தான் ஒரு குமருவுடன் அணைஞ்சி சோலிய முடித்து விட்டு காசு இல்லை என்று உதட்டை பிதுக்கிய போது, தன்னை தமிழ் மரபுடன், பரந்த மார்புடன்  பாப்பு மன்னித்து அருளிய சம்பவத்தை குரல் தளுதளுக்க சொன்னான்.’ங்கொம்மாள இங்க கொண்டு வந்து விடுடா..ங்கொக்காள இங்க கொண்டு வந்து விடுடா’ன்னு அமரர் பாப்பு அப்போது கடுமையாக முதலில் திட்டி விட்டு, அப்புறம் தான் மன்னித்தாள் என்பதை மட்டும் ஒச்சு மறைக்கத்தான் வேண்டியிருந்தது. சபை நாகரீகம். இரங்கல் கூட்டத்தில் இறந்தவர் பற்றி தப்பாக பேசக்கூடாது.

ஒத்த காதன் சோழவந்தான், திருப்பரங்குன்றம், அவனியாபுரம் என்றெல்லாம் தாட்டி தேடி வேண்டி  சென்றவன், சென்ட்ரல் தியேட்டர் சந்து கஸ்டமராக இல்லாத போதும்  உச்சக்குரலில் பாடினான். “ என் தங்கமே, உனது மேனி தாங்கி நான் சுமந்து செல்ல எனக்கொரு பந்தமில்லை”
 சற்று நிறுத்தி அடுத்தவரி உச்சரித்த ஒத்தக்காதன் குரலில்
துல்லியமாக பொறாமை தொனித்தது- “ எவருக்கோ இறைவன் தந்தான்” 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.