Share

Oct 9, 2020

Disgrace and Discomfort

 Lady Macbeth : "It is the eye 

of the childhood

 that fears a painted devil" 


A ruffian says "You fear, there fore I am" 


கவி ஒரு குழந்தை. 


'கனவின் மனிதன்' தலைப்பிடப்பட்ட இந்த கவிதை 

குழம்பிய ஞானக்கூத்தன் 


"ஒருவனைக் கனவில் கண்டேன் 

உதடுகள் பற்கள் கண்கள் 

தலைமயிர் நகங்கள் கை கால் 

அனைத்துமே மனிதன் போல 

இருந்திடும் அவனைக் கண்டேன் 

கனவிலும் மனிதன் போலத்

தோன்றினால் மனிதன் தானா? "


வைத்தீஸ்வரன் கவிதையில் கடவுளின் விசாரம் 

' மரங்களை நம்பி 

பறவைகளைப் படைத்தேன்... 

அப்போது மனிதர்களை யோசிக்கவில்லை!'


Why be a  man when you can be a success? 

என்று திகைக்க வைக்கும்

 பெர்டோல்ட் ப்ரெக்ட் கேள்வி. 

தோற்பவன் தான் மனிதன்? 

அல்லது ஜெயிக்க முடிகிற போது

 மனிதத்தையும் கைவிடாமல்

இருக்க வேண்டியதன் அவசியம். 


மனிதன் பற்றி ப்ரெக்ட். 

" மனிதன் ரொம்ப உபயோகமானவன். 

அவனால் பறக்க முடியும் 

கொலை செய்யக்கூடியவன் 

ஆனால் அவன் ஒரு குறையுள்ளவன். 

அவனால் சிந்திக்க முடியும்."


திரும்பவும் ஷேக்ஸ்பியர் " There is no art to find 

the mind's construction in the face" 


Looks can be deceiving. 

மூடருக்கும் மனிதர் போல முகமிருக்குதடா 

- கண்ணதாசன் ஆதங்கம். 


குறள் - மக்களே போல்வர் கயவர் 


What power shapes a human's way. 

Disgrace and Discomfort.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.