Share

Oct 27, 2020

அந்திம காலம்



எழுத்தாளர் சுஜாதா தான் மறைவதற்கு சில வருடங்களுக்கு முன் தன் அந்திம காலம் பற்றிய துக்கத்தை வெளிப்படுத்தினார் :

" நீண்ட வாழ்வின் இறுதியில் உள்ள சோகங்கள் சற்றே துருத்தி நிற்கின்றன.

வானவில் கனவுகள் 

நிறமிழந்து விட்டது தெரிகிறது."


'To view with hollow eye and wrinkled brow

An age of poverty.'

- Shakespeare - The Merchant of Venice 


" மீனோட்டம் " சிறுகதை தொகுப்பு முன்னுரையில் லா.ச.ரா வாழ்க்கையின் மாலையில் தான் இருப்பதாக குறிப்பிட்டு விட்டு ' மாலை என்ன ..அந்தியே வந்தாச்சு " என்பார். 

இப்படி சொன்னது 

லா.ச.ரா இறப்பதற்கு

 கால் நூற்றாண்டுக்கு முன்னரே. 


"Age, with his stealing steps,

Hath clawed me in his clutch." 

- Hamlet


இளமையில் உலகின்பக்கேணியில் மூழ்கி முக்களித்த பின் அந்திம காலம் தரும் துயரம். 

' அந்தி ' என்ற தலைப்பில் ஆதவன்

 ஒரு அருமையான கதை எழுதியிருக்கிறார். 


முதுமை மரணம் பற்றி ' கழுகு ' என்ற கதை தி .ஜானகிராமன் எழுதியிருக்கிறார். 


முதுமையின் வக்கிரம் பற்றி 'பாயசம் ' என்ற கதை, 'அவலும் உமியும்' குறுநாவல் எழுதியிருக்கிறார்.


"And as with age his body uglier grows,

So his mind cankers."

- The Tempest


 முதுமையின் அவலம் " விளையாட்டு பொம்மை '' என்ற திஜாவின் அபூர்வமான சிறுகதை.

பிராயமான காலத்தில் பிரகாசிக்கும் கூர்ந்த ஊடுருவும் புத்தி சக்தி 

கடைசியில் எப்படியெல்லாம் மழுங்கி விடுகிறது. 


" Sir, I am too old to learn."

- King Lear 


இந்திரா பார்த்தசாரதியின் 'வெய்யில் 'மறுபக்கம் ' என்று திரைப்படமானது .


பல எழுத்தாளர்கள் கடைசியில் வயதான காலத்தில் குருவிமுட்டைகளை போடடுத்தளளுவார்கள். மழுங்கிய எழுத்து.

"When the age is in, the wit is out"

- The Merchant of Venice 


கடைசி காலம் தன் தோல்விகள் பற்றி 

அசை போடும்போது தான் காணாத

 வெற்றிகளை தன் புத்திரன் காணவேண்டும்

 என மனித மனம் ஏங்கும். 

ஒருவர் தன்னை மற்றவர் ஜெயிக்கவேண்டும் என்று விரும்புவது தன் மகன் விஷயத்தில் தான். 

 " புத்ராத் இச்சேத் பராஜயம் "


ஆர்தர் ரைம்போ நல்ல இளமையில் இருக்கும்போதே முதுமை பற்றி கவிதை எழுதிவிட்டான் - நாகார்ஜுனன் மொழிபெயர்ப்பு :

புறப்பாடு

"போதும்

பார்த்தாகி விட்டது. 

எல்லாவிதமும்

சந்தித்தாகி விட்டது

பார்வையதை. 

போதும். 

நகரங்களின்

மாலையின்

கதிரவனின்

சந்தடி போதும் எப்போதுமாக. 

போதும்

அறிந்தாகிவிட்டது

வாழ்க்கையின் நிறுத்தம் பல

ஓசை பல

பார்வையும்


இனி புறப்பாடு."


இக்கட்டான சோகமான நிலையை,

பரிதவிப்பான நிலையை

Moment of Calvary என சொல்வார்கள்.                    முதுமைக்கால மன நிலையே,

மரணத்தை மட்டுமே எதிர்கொள்ளும் நிலையே Moment of Calvary தானே.

.. 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.