Share

May 12, 2012

Proud people breed sad sorrows


காஸ் டிமாண்டு,கரண்டு பிரச்னைன்னு பல பல 
சிக்கலில் 
விலைவாசி கவலையில் நொம்பலப் பட்டு குத்துயிரும்
கொல உயிருமா தவிச்சிக்கிட்டு இருக்கும்போது,
 டிவியை போட்டா  
சிவாஜி கணேசன் பெத்த மகன் பிரபு 
 கொப்பளிக்கும் உணர்ச்சியைக் கொட்டி " என் தங்கம்!என் உரிமை!புரட்சி!போராட்டம்!கல்யாண் ஜுவல்லர்ஸ்!"ன்னு தாலிய அறுக்கிறான்..



கார்ட்டூன் பிரச்சையை
கண்டுக்காம இருந்தாலும்
முடியல சாமி..

மம்தா பானர்ஜி இன்னிக்கு கூட  கூந்தல விரிச்சிப் போட்டு,சிலம்பை தூக்கிப் போட்டு  உடைச்சி,
ஒத்த முலையை பிச்சி வீசி "புரபசர் அம்பிகேஷ் மகாபத்ரா ஈமெயிலில் சர்குலேட் செய்த கார்ட்டூன்  எனக்கு விடப்பட்ட ஒரு கொலை மிரட்டல்"ன்னு ஒப்பாரி வைக்குது. The  graphic  used the word “Vanish” which implied “Murder”.







சம கால கார்ட்டூன் படுத்துற பாடு இப்படின்னா அறுபது வருசத்துக்கு முன்னால வெளி வந்த
நேரு-அம்பேத்கர் கார்ட்டூன் பாராளுமன்றத்தையே
ஸ்தம்பிக்க வைக்குது.
“Not only is the Parliament,but the whole country is unhappy.”ன்னு காட்டுக் கூப்பாடு.Proud people breed sad sorrows not only for themselves!



1949ல் சங்கர் பிள்ளை வரைந்த கார்ட்டூன் பள்ளிக்கூட பாடப் புத்தகத்தில் இடம் பெற்றதன் 
காரணமாக
இரண்டு கல்வித்துறை நிபுணர்கள்
NCERTயின் ஆலோசகர்கள் பதவியிலிருந்து 2012ல் ராஜினாமா செய்ய வேண்டியுள்ளது.
அந்த இருவரில் ஒருவருடைய அலுவலகம்
புனேயில் அடித்து நொறுக்கப் பட்டுவிட்டது.



We all have an aweful time to be alive.






































 


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.