Share

Feb 27, 2021

Ignorance with wings



ரொம்ப வசதியான அந்தப் பெரியவர் 

ஒரு சாமியாரின் கண்மூடித்தனமான பக்தர். 


சாமியார் பிரபலமாவதற்கு முன் 

அவரிடம் பழகியவர்.


இவர் இளவயதில் ஏழையாய் இருந்த காலத்தில் அவரைப் பார்த்து விசிறியபடி சாமி சொன்னாராம். “You are a rich man!”

இவர் பணக்காரராகவே ஆகிவிட்டார். 


சாமியாரைப் பார்க்க அந்தக்காலத்தில் ஒரு முறை போனபோது அவருடைய வீட்டில் இருந்து கிளம்பி காலைக்கடன் முடிக்க வெட்ட வெளியில் ஒதுங்கிய போது நடந்ததை அந்தப் பணக்கார பெரியவர் சொன்னார்.

“ சாமி ஒரு பக்கமும் நான் ஒரு பக்கமுமாக ஒக்காந்து இருக்கோம். 


சாமி சிகரட்ட பிடிச்சிக்கிட்டே வெளிக்கி போன பின் எந்திரிச்சி நடந்தாரு.


 நான் என்ன செஞ்சேன் தெரியுமா?


 அவர் பேண்ட பீய போய் பாத்தேன். 



கொஞ்சமா பிள்ளையார் மாதிரி இருந்த பீய கையில எடுத்தேன்.ஈரப்பசையே இல்ல. 


மோந்து பார்த்தேன். கொஞ்சம் கூட 

நாத்தமே இல்ல.


பிரசாதம் தான அது.

 கொஞ்சம் வாயில போட்டுக்கிட்டேன்.

கொஞ்சம் கூட கொமட்டவே இல்ல..”


..

https://m.youtube.com/watch?v=dYiA2ND7vVs&feature=share

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.