Share

Oct 29, 2019

எம்.ஆர்.ராதா குரல்ல

உச்சி வெய்யில் நண்பகல் பதினொன்றரை மணி நேரம். ஆலப்பாக்கத்தில் ஒரு காலனியின் நுழைவு பகுதிக்கு முன்னே தேங்கி நிற்கிற சிறு அளவு மழை நீர் குட்டை. ரோட்டில் அதை ஒட்டி ஒரு தள்ளு வண்டி டிபன் ஸ்டால். இந்த பக்கம் ஒரு பேங்க். பஸ் ஸ்ட கரும்பு ஜூஸ் கடை. எதிரே ஒரு ஃபாஸ்ட் ஃபுட் உணவகம். படு பிசியான ரோடு.எதிரே ஃபர்னிச்சர் கடை. டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர் ரெண்டு.பல வகை வாகனங்கள் நகர்வில். நடப்பவர்கள், நிற்பவர்கள் என ஜீவனுள்ள பகுதி ஆலப்பாக்கம் மெயின் ரோடு.
ஒரு பெரிய மனுஷன் வேட்டிய கழற்றி தரையில் வைத்து விட்டு, ’யார் கோபப்பட்டாலும் எனக்கென்ன? நான் கவலைப்படவே மாட்டேன், மயிரே போச்சி’ன்ற தோரணையில டவுசரை கழற்றிய படி புடுக்கு தெரிய, பீக்குண்டி தெரிய மழை நீர் குட்டையில் குண்டி கழுவிக்கொண்டிருக்கும் போது….
பஸ்ஸில் ஏறி உட்காரும்போது இந்த காட்சியை நான் பார்க்கும்படியானது.
இது போன வருஷ கத.
இந்த ஆள் மன நிலை சரியில்லாதவர் என்கிற மாதிரி தான் தெரிகிறது.
பாதி விவர மெண்ட்டல். இந்த அபிப்ராயத்தை சாதகமாக்கிக்கொண்டு அத்து மீறும் அர மெண்ட்டல்கள் அனேகம். எவ்வளவு பேர பாக்க வேண்டியிருக்கு.

கடந்த ஒரு வருடத்தில் ஆலப்பாக்கம் மெயின் ரோட்டில் ஜீவா காம்ப்ளெக்ஸ் பக்கம் பார்க்கிறேன். உலாத்திக்கொண்டு சில சமயம். கார்ப்பரேஷன் ஸ்கூல் ஒட்டிய ஆந்திரா பாங்க் நடுவில் உள்ள பாலாஜி காலனியில் இருந்து ஸ்கூட்டரில் வெளி வரும்போது பாங்க் சுவரோரமாக டூ டாய்லட் ஆயத்தத்தில் இருக்கும் போது நான் பார்த்து “ இங்க வெளிக்கி இருக்கக்கூடாது. போ.. போ..” என்றேன். நகர்ந்து ரோட்டில் மெதுவாக நடந்து நின்று கொண்டான்.
ஒரு மீன்காரம்மாவிடம் இந்த ஆளை காட்டி விசாரித்தேன். ”வசதியானவன் தான். சொந்த வீடெல்லாம் இருக்கு” என்றாள்.
வீட்ல மூச்சி முட்ட சாப்ட்டுட்டு,வெட்ட வெளியில் வெளிக்கி போகும் சுகத்தை அனுபவிக்கிறான்.எங்க தோதுப்படுதோ அங்கங்க அன்னன்னைக்கி. லொக்கேசன அப்பப்ப மாத்திக்கிட்டு.
காலனியை விட்டு வெளியே வரும்போது பாங்க் சுவரையொட்டி நரகலை பார்க்க நேர்ந்தால் இந்த ஆள் ஞாபகம் வரும். பேங்க் தேசியமயமாக்கினது இந்திரா காந்தின்னா இவன் பேங்க் சுவத்த ஒட்டி நேஷனலைஸ் பண்றான்.
எழுபது வயதிருக்கும். நல்ல உயரம். காக்கி டவுசர், வேட்டி, மேலுக்கு சட்டை போட்டிருக்கிறான்.
ஒரு நாள் மாலை பார்க்குக்கு வாக்கிங் போனேன்.
உள்ளே அந்த ’வெட்டவெளி வெளிக்கி’ போற ஆள் உட்கார்ந்திருந்தான்.
அரைப்பார்வை என்னை பார்த்தான். நான் இரண்டாவது ரவுண்டு வரும்போது நின்று கொண்டிருந்தான். வேறு ஆள் யாரும் அந்த பகுதியில் அப்போது இல்லை. இவனுக்கு ஒரு Shock treatment கொடுக்கனுமே.
நான் எம்.ஆர்.ராதா குரலில் “ காலனில வந்து வெளிக்கி இருக்கிறான். மழத்தண்ணில குண்டி கழுவுறான்.” என்று சொல்லியவாறு கடந்து சென்றேன்.
சட்டென்று திரும்பி என்னை கவனிக்கிறான். நான் சொன்னது புரிந்திருக்குமா?
அடுத்த ரவுண்டில் அவன் நிற்கிற பக்கம் வரும்போது நான் ராதா குரலிலேயே டயலாக் “ காலனியில வந்து வெளிக்கி இருக்றான். மழத்தண்ணில குண்டி கழுவுறான். அயோக்கிய பய”
மூன்றாம் ரவுண்டு நான் சுற்றி வரும்போது அந்த ஆள் என்னையே உற்று கவனிக்கிறான். நான் கட்டத்தொண்டயில் ” காலனில வந்து கொள்ளக்கி போறான். மழத்தண்ணில குண்டி கழுவுறான். போலீஸ் ஒரு நாள் புடிச்சிட்டு போகப்போகுது. ஜெயில் தான். பப்ளிக் ப்ளேஸ்ல வெளிக்கி இருக்கறவன போலீஸ் ஜெயில்ல தான் போடும்.”
விறு விறு என்று பார்க்கை விட்டு வெளியேறி, ஒட்டியுள்ள டீக்கடையில் நின்று கொண்டு, வாக்கிங் போகும் என்னையே கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருந்தான். அப்புறம் ரோட்டில் நடக்க ஆரம்பித்தான்.
நான் பத்து ரவுண்டு வாக்கிங் முடிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.