Share

Sep 30, 2019

சாரு நிவேதிதா ஃபேஸ்புக்கில் R.P. ராஜநாயஹம்

27.09.2019
சாரு நிவேதிதா
R.P. ராஜநாயஹம் எனக்கு நன்றி சொல்லியிருந்தார். அதற்கு நான் எழுதிய பதில் இது:
இன்னும் அதிகம் அதிகம் அதிகம் எழுதுவதே எங்கள் எதிர்பார்ப்பு. இதையெல்லாம் எழுத இப்போது உங்களை விட்டால் வேறு ஆளே இல்லை இன்று. காருக்குறிச்சி அருணாச்சலம் என்று இப்போது சொன்னால் அப்படீனா என்னா என்றுதான் கேட்கும் நிலையில் இருக்கிறது இன்றைய தலைமுறை. இந்த நிலையில் சென்ற தலைமுறையை சென்ற தலைமுறையின் கலாச்சாரத்தை ஆவணப்படுத்தும் முக்கியமானவர்களுள் நீங்கள் ஒருவர். இரண்டு பெயர்கள் எனக்கு ஞாபகம் வருகின்றன. ஒன்று, தியடோர் பாஸ்கரன், இரண்டு, எஸ். முத்தையா. அடுத்து R. P. ராஜநாயஹம். இதில் எதுவும் வரிசைக்கிரமம் எல்லாம் கிடையாது.

....

28.09.2019
சாரு நிவேதிதா :
R.P. ராஜநாயஹம் இன்று எழுதியுள்ள ஏவிஎம் ஸ்டுடியோ என்ற பதிவு ஒரு அற்புதமான சிறுகதை.
எப்பேர்ப்பட்ட கலைஞன் அவன்.
அந்தப் பதிவை என் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.