Share

Sep 16, 2019

மந்தை



உயிரோட ஒர்த்தன் குழியில எறங்கப்போறான்ன உடன எவ்வளவு 'ஆன்மீக கலை தென்றல்கள்' கூடி நிக்கறானுங்க. எங்கங்க இருந்தெல்லாம் கெளம்பி வர்றாங்க. என்னா ஒரு வக்ரம். கும்பல் கும்பலா 'சாமியார் தாழன்' கால்ல விழுந்து உண்டியல்ல பணத்த போடுறானுங்க. சூடத்த கொளுத்தி, துண்ட போட்டு தாண்டுறானுங்க. குழிக்குள்ள எறங்கப்போறத பாக்கணுமேன்னு, மண்ணு ஒரு பிடி போட்டு குழிய மூடனுமுன்னு விடிய விடிய தவிச்சி தக்காளி விக்றானுங்க.

எழுபத்தஞ்சு வருஷத்துக்கு முன்ன சர்ச்சில் ஒரு கூட்டத்தில பேச வந்தப்ப அவரோட கைபாணம் ஒர்த்தன் கண்ண விரிச்சி "உங்க செல்வாக்க பாருங்க. எம்மாஞ்சனம், எம்பூட்டு கூட்டம்" னப்ப, சுருட்ட வாயில இருந்து எடுத்து சர்ச்சில் ரீயாக்சன் "அட போடா, அப்படியெல்லாம் வாய பொளந்து ஏமாறக்கூடாது. என்னய இப்ப இந்த எடத்துல உயிரோட தூக்குல போடப்போறதா சொல்லியிருந்தா இத விட பல மடங்கு அதிகமா, எள்ளு போட்டா எள்ளு எடுக்க முடியாதுன்ற அளவுக்கு கெட சனம் கூடியிருப்பாங்கெ. போப்பா போ"

  ஆட்டுக்கார அலமேலு படத்தில் நடித்த ஆட்டை ஊர் ஊரா கொண்டு போனப்ப அத பாக்க கெட சனம். எல்லா ஊர்லயும் கூட்டமான கூட்டம்.

பேராசிரியர் அப்துல் காதர்  அப்ப ஒரு ரெண்டு வார்த்த சொன்னார். செம.

"ஆடு என்னவோ கம்பீரமாகத்தான் நின்றது.
மக்கள் தான் மந்தையாகிப்போனார்கள்"


https://www.youtube.com/watch?v=dYiA2ND7vVs&t=80s

https://www.youtube.com/watch?v=dYiA2ND7vVs&t=118s

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.