Share

Jul 18, 2021

R. P. ராஜநாயஹம் பற்றி Murugan RD

 Murugan RD 


R. P. ராஜநாயஹம் பற்றி 


 உங்களை எழுத்தாளர் என்று யாரும் அடையாளப்படுத்தி விடக்கூடாது என்ற பதைபதைப்பு ஏற்படுகிறது. 


உங்கள் வாழ்க்கையும் எழுத்தும் தருகின்ற மகிழ்ச்சியும், பிரமிப்பும்  எழுத்தாளர்களாலேயே விவரிக்க முடியாத அளவுக்கு தனித்துவமானது.


 எந்த தலைப்பாக இருந்தாலும் அதை படிக்கின்ற எந்த வகை வாசகனும் 

ச்சே என்ன ஒரு இன்ட்ரஸ்டிங்கான எழுத்து நடை என்று ஒவ்வொரு நொடியும் மனதிற்குள் பிரமித்துக் கொண்டேதான் படிப்பார்கள். 


பாமர வாசகன், இலக்கிய வாசகன், சினிமா ரசிகன் என்று எந்த வகையான ரசிகனாக இருந்தாலும் அவர்கள் ரசிக்கதக்க., பிரமிக்க தக்க  விசயங்களும் உங்கள் எழுத்தில் உள்ளது. 

 இங்கே உள்ள எழுத்தாளர்கள் எந்த விதத்திலும் உங்கள் எழுத்துடன் ஒப்பிட்டு பார்க்க கூடாதவர்கள். 

உங்களுக்கு இணையான சுவாரஸ்யமான பல்வேறு தளங்களிலும் எழுதக் கூடிய ஒரு எழுத்தாளரை கண்டிப்பாக இங்கு யாராலும் சுட்டிகாட்ட முடியாது. உங்கள் வாழ்க்கை அனுபவமும், எழுத்தின் சுவாரஸ்யமும் எத்தனை முறை படித்தாலும் அலாதியான இன்பமே. இன்னும் விரிவாக எழுதலாம் தான்.


எந்த ஒரு (வ)கைக்குள்ளும் சிக்காத வண்ணத்துப்பூச்சி போன்ற எழுத்துதான் உங்களோடது. 

ஒப்பீடு பண்ணி விரிவா எழுதினா எழுத்தாளர்கள், அவர்களின் வாசர்கள் என்று நிறைய பேர் கடுப்பாவர்கள் என்பதால் இங்க எழுத விரும்பவில்லை. 


தமிழ எழுத்துலகம் அரசியல் போலவே வலது சாரி, இடது சாரி என்ற இரண்டு வட்டத்துக்குள் சண்ட போட்டுகிட்டிருக்கு. 

எழுத்தில் அவர்கள் திணிக்கும் அரசியலும், மேட்டிமைதனமும், எதிர் அணி மீது அவர்கள் காட்டும் வன்மும், ஆவேசமும், ஏதோ ஒரு விதமான பொதுபுத்தி, சம்பிரதாயமான நடவடிக்கைகள் இவையெல்லாம் 

உங்க எழுத்தில் என்னைக்குமே இருந்ததில்லைங்கிறது 

உங்களோட தனிப்பெரும் பெருமிதமான ஆற்றல், அதிர்ஷ்டம், இயல்பு 

எப்படி வேணாலும் வச்சிக்கலாம் சார். 


 எவருடனும் உங்களை ஒப்பீடு செய்ய முடியாது, கூடாது. 


திரு. R.P. ராஜநாயஹம் சாரை உயர்வாக எழுதுறேன்னு அவரை வேறுயாருடனும் கம்பேர் பண்ணி எழுதவேண்டாம்னு மற்றவர்களை கேட்டுக்கிறேன். நன்றி

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.