Share

Jul 20, 2021

பா. அசோக் சொல்வது

 தமிழ் நாடு - புதுச்சேரி பார் அசோசியேஷன் 

கோ - சேர்மன்  பா. அசோக்


"ஆத்மார்த்தி சொல்வது போல,  சினிமா, தமிழர் வாழ்வில் ஒரு பகுதி என்றால், தவறேயில்லை. அதிலும் குறிப்பாக மதுரைக்காரர்களுக்கு எல்லாமே சினிமா தான்,  சிலர் பேசுவது , நடை உடை பாவனைகளிலேயே அவர் இன்னார் ரசிகர் என சொல்லிவிடலாம்,  சேதுராமன் அண்ணன் துள்ளலாக நடந்து வந்தால், அவர் வாத்தியார் படம் பார்த்துள்ளார், துரை பாவா போடும் சட்டை அனேகமாக ரஜினி பட சட்டையாக இருக்கும்... மோகன் மாமா வீட்டில் சண்டை போட்டு அதிர்ச்சி மீளாதவராக நடக்கும் போது அங்கே சிவாஜி தான் மோகன் மாமா உருவத்தில் போவார்.  அத்தனை பிடிப்பு சினிமா மேல்,  இந்த மதுரைகாரர்களுக்கு... ராஜநாயஹம் சாரை கேட்கவா வேண்டும்,  அவர் உள்ளம் அழகான வெள்ளித்திரை.  ஆனால் கேமராவுடனிருக்கும் வெள்ளித்திரை.  எத்தனை பெரிய நிகழ்வுகளென்றாலும்,  சாதரணமாக, நம் அருகில் அமர்ந்திருக்கும் நண்பரை போல செய்திகள், அருவியாய் கொட்டும். நொடிக்கொரு செய்தி,  ஒன்றை கேட்டு முடிக்கும் முன், தொடர்புள்ள அடுத்த செய்தி,  அடுத்து அடுத்து என வந்து கொண்டேயிருக்கும்... தொடாத துறையே இல்லை, சாஸ்திரிய சங்கீதமா..? இந்தா பிடி ..


ஓவியமா.. இதை பார்,  


அசோகமித்தரனா, இவர்தானே அத்தாரிட்டி, பிரமிளை கண்டு உலகம் அஞ்சிய போது,  அந்த குழந்தையை பேணியவர்,... ஊரே வியக்கும் சாருவுக்கு... சாரு இவரை கண்டு வியப்பார்...


கிரா கதைத்தவை இன்னும்கூட அதிகம்... 


எவ்வளவோ உண்டு சொல்ல...


காலம் சில வைரங்களை காலங்கடந்து தான் காட்டும்... ஆனால் அந்த வைரங்கள் காலத்தை வென்று நிற்கும்... அப்படி ஒரு வைரம் தான் என் ஞானதகப்பன், 


R.p. Rajanayahem ... வாழ்க அவர் புகழ்"

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.