Share

Jul 11, 2021

திரிசடை கண்ட கவித்துவ கனவு

 பிரமிளின் மிக பிரபலமான கவிதை :

சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று

காற்றின் தீராத பக்கங்களில்

ஒரு பறவையின் வாழ்வை

எழுதி செல்கிறது. 


லா ச ரா வின் உரைநடையில் தெளித்து விழும் கவிதை :

பறக்கும் கொக்கின் சிறகடியினின்று

புல்தரை மேல் உதிர்ந்து

பளீரிடும் வெள்ளை இறகு.

......


சீதையின் அக்னிப்பிரவேசம் - கதைகளிலும் ,கவிதைகளிலும், மேடைகளிலும் அதிகம் பேசப்பட்ட விஷயம்.


லா .ச .ரா . : "சீதை குளித்த நெருப்பு.

நெருப்பின் புனிதம் சீதைக்கா?

சீதையின் புனிதம் நெருப்புக்கா?"

....


" சேற்றுத்துளி தெளித்த தாமரை போல்

சீதை பிரகாசமாகவும் இருந்தாள்.

பிரகாசமாக இல்லாமலும் இருந்தாள்."


தி .ஜானகிராமன் இதை 'ஆரத்தி ' சிறுகதையில் சொல்கிறார்.


கம்பன் சொன்னதைத் தான் மேற்கோள் காட்டியிருக்கிறாரா?

 ராமாயண பாகவதரின் மகன் தி.ஜா. 

..


சீதை பற்றி தி.ஜா 'கடைசி மணி 'கதையில் சொல்கிற விஷயம் இன்னொன்று.


 திரிசடை கண்ட 'கவித்துவமான கனவு'.


" சீதை வெள்ளை யானை மீது ஏறி நின்று சந்திரனைத் தொட்ட மாதிரி

திரிசடை கனவு கண்டாளாம் ''


...........

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.