Share

Dec 9, 2020

திருச்சியின் கலாச்சார அடையாளம்

 மலைக்கோட்டை உச்சி பிள்ளை, 

ஸ்ரீரங்கன் போல இந்த செயின்ட் ஜோசப்ஸ் சர்ச்                          லூர்து மாதாவும் தான் 

திருச்சி நகர கலாச்சார அடையாளம். 


திருச்சி செயின்ட் ஜோசப்ஸ் பள்ளி

 மாணவ பருவத்தில் இந்த சர்ச்

 என் யௌவன நினைவுகளில் 

எத்தகைய இடம் பெற்றிருந்தது. 


எத்தனை எண்ணிலடங்கா முறை இதனுள் புகுந்து புறப்பட்டிருக்கிறேன். 

 

The hymns I sang with an open throat 


அந்த சிலிர்க்க வைக்கும் பவித்ர கீர்த்தனைகள் 


Joy was in my heart when I heard them say 'Let us go to God's  house' 


'Oh come,  let us adhore him'


'Tantum Ergo Sactamentum '


' மாதாவே சரணம், உந்தன் பாதாரம் புவிக்காதாரம்

மாசில் உன் மனமும் யேசுவின் உளமும் 

மாந்தரின் தவறால் நோவுறக் கண்டோம் '


' தியாகத்தின் தருவே, திரு உருவே 

தினம் தினம் நாவில் வரும் அமுதே'


' ஆண்டவரே, நீர் எவ்வளவோ பெரியவர் 

அழகான மகத்வமுள்ளவர்

மகிமை உள்ளவர்' 


ஒரு முறை உச்சியிலுள்ள சிலுவையில் கழுகு சிக்கி சில நாட்கள் தவித்து துடித்து உயிர் விட்டது. அதன் பின்னர் அது அழுகி, மெல்ல மெல்ல காற்றில் ஆடி, ஆடி கொஞ்சம் கொஞ்சமாக, பகுதி பகுதியாக மறைந்தது. சிறுவனாய் கண்ட நிகழ்வு. 


கடந்த காலங்களில் எப்போதெல்லாம்

 திருச்சி மெயின் கார்ட் கேட் சென்றாலும் 

அந்த சிலுவையில் உயிர் நீத்த அந்த கழுகு 

நிழலாடும். 

அண்ணாந்து  சிலுவையை திகைத்துப் பார்த்து நினைவில் திளைத்து நிற்பேன்.


இறந்தவர்களின் உடலை சர்ச்சில் வைத்து பிரார்த்தனை, பூஜை செய்து கல்லறைக்கு 

எடுத்துச் செல்வார்கள். 

குருவானவர்களை கோவிலின் கீழே பாதாள பகுதியில் புதைக்கப்படுவார்கள். 

 கோவிலேயே கூட புதைப்பதை பார்த்திருக்கிறேன். 

 எத்தனையோ சாவு பிரார்த்தனைகளில் நான் சிறுவனாக பங்கேற்றிருக்கிறேன். 


விட்ட குறை தொட்ட குறையாக திருச்சியில் 2001 ம் ஆண்டு கூட என் கிறிஸ்தவ நண்பன் மகன் அகால மரணம் அடைந்த போது பிரார்த்தனை பூஜையில் கலந்து கொண்டு சர்ச்சில் இருந்து உடலை நானும் சுமந்து 

வெளி வந்து கல்லறைக்கு செல்லும் ரதத்தில் வைத்த துயர நிகழ்வு மறக்க முடியாத அனுபவம்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.