Share

Oct 12, 2019

அசோகமித்திரனின் 'பாண்டி பஜார் பீடா'




சித்தூர் வி. நாகையா,
சி. எஸ். ஆர் என்ற சிலகலபுடி சீதாராம ஆஞ்சநேயலு இருவரை வைத்து அசோகமித்திரன் ஒரு சிறுகதை ஆனந்த விகடனில் எழுதியிருக்கிறார்.
'பாண்டி பஜார் பீடா. ' நாகையா இன்று சிலையாக நிற்கிற பனகல் பார்க் அருகிலுள்ள பாண்டி பஜார் தான் கதைக்களம்.

சி. எஸ். ஆர். பாதாள பைரவியில் மகாராஜாவாக நடித்தவர்.

கதையில் நாகையா வெங்கையாவாக. சி. எஸ். ஆர் அதே பெயரில்.
அப்பொழுதுதான்
இருவருக்குமே அசதியான காலம்.


நாகையா பீடா வாங்க வரும்போதே பீடா கடை கோபால கிருஷ்ணா' முதல் போணியாகட்டும் '.
அர்த்தம் - கடனுக்கு முதல் பீடா தரமுடியாது.

நாகையா காசு கொடுத்தே முதல் போணி செய்து விட்டு மீதி காசை வாங்க மறுத்து நாளைக்கு பீடா வுக்கு அவனிடமே இருக்கட்டும்.

கீதா கபே முன் நிற்கிறார்.

அந்த எட்டணா இருந்தால் டிபன் காபி சாப்பிட்ட பிறகு பீடா போட்டிருக்க முடியும். பீடாக்கடைக்காரனிடம் ரோஷப்பட்டதன் விளைவு.

பழைய கார் ஒன்றில் சி. எஸ். ஆர் வருகிறார்.

டிரைவர் தன்னை ரிலீவ் பண்ணச்சொல்லி எரிச்சல் படுகிறான். சி. எஸ். ஆர் காபி சாப்பிட்ட பின் வீட்டில் அவரையும் காரையும் வீட்டில் விட்ட பிறகு தான் அவன் கிளம்ப முடியலாம். கவனிக்க டிரைவருக்கு காபி கிடையாது.

நாகையா கீதா கபேக்குள் சி. எஸ். ஆர் தயவில்.
'சி. எஸ். ஆர் எங்கிட்ட ஒரு காசு கிடையாது. '
' பயப்படாதே. நான் பாத்துக்கிறேன் '

ரெண்டு பிளேட் இட்லி சாம்பார்.

' ஜீவிதம் ' தெலுங்கு படத்தில் நல்ல பேரும் பிரபலமும் பார்த்த சி. எஸ். ஆர் என்பது நாகையாவிற்கு ஞாபகம் வருகிறது.

வருத்தப்படுகிறார். பணம் வந்த போது, ஏன் ஜாக்கிரதையா இல்லை. நானாவது மூன்று படங்கள் எடுத்து வசதியை தொலைத்தேன். சி. எஸ். ஆர்., அவனாக ஒரு படம் கூட எடுக்கவில்லை.

இட்லிக்கு பிறகு ஒரே ஒரு கப் காபியை இருவரும் பகிர்ந்து குடிக்கிறார்கள். பில்லுக்கு சி. எஸ். ஆர் பணம் கொடுக்கிறார்.

'உங்களை வீட்டுல விட்டுட்டு போறேன். '

நாகையா பதில்' இங்கே நிக்கிறேன். எவனாவது கர்ணன் மாதிரி வருவான். '

சி. எஸ். ஆர் போன பின் நாகையா கொஞ்சம் நடந்து சலூன் பக்கம் வருகிறார்.

ஒரு இளைஞன் இவர் பாதங்களை தொட்டு வணங்குகிறான்.

சவுண்ட் அசிஸ்டெண்ட். சித்தூர் தான் அவனுக்கும்.
அமெரிக்கா வரை நாகையா பிரபலம் பற்றி சவுண்ட் எஞ்சினியர் அவனிடம் சொன்னதை குறிப்பிடுகிறான். பால் முனி கூட இவர் பாட்டை கேட்டு உருகியிருக்கிறார்.

நாகையா உடைந்து போய் சொல்வது " இந்த மாதிரி பேச்செல்லாம் நான் நிறைய கேட்டிருக்கேன். இதுக்கெல்லாம் அர்த்தமே கிடையாது."

இளைஞனுடைய அம்மாவுக்கு இவர் தான் யோகி வேமனா.

சித்தூருக்கு எங்க சவுண்ட் இஞ்சினியர் கார்லயே போவோம். என் அம்மா, அப்பா உங்கள பாத்தா சந்தோஷப்படுவாங்க.

அந்த சவுண்ட் அசிஸ்டெண்ட் தான் அன்று அவருடைய பால் கடனை தீர்க்கிறான்.

.........

புகைப்படத்தில் இரண்டாவதாக நாகையா நிற்கிறார். அதே வரிசையில் ஆறாவதாக நிற்கிற நடிகர்
சி. எஸ். ஆர்.
இந்த புகைப்படம் 1940களில் எடுக்கப்பட்டிருக்கிறது.


கால கண்ணாடியில் ஒரு அபூர்வ காட்சி.
எவ்வளவு கலைஞர்கள்.
தில்லானா மோகனாம்பாள் எழுதிய கொத்தமங்கலம் சுப்பு, வி. நாகையா,
ஆறாவதாக
சி. எஸ். ஆர்.
தண்டபாணி தேசிகர் அருகே கே. ஆர். ராமசாமி, ரஞ்சன், டி. ஆர். ராமச்சந்திரன்,
கடைசியில் நிற்பவர் டைரக்டர் கே. சுப்ரமணியம். (பத்மா சுப்பிரமணியம் அப்பா)
உட்கார்ந்து இருக்கும் பெண்கள் புஷ்ப வல்லி(ஜெமினி மனைவி, ரேகா அம்மா), பாதாள பைரவி கதாநாயகி மாலதி
நடுவில்
டி. ஆர். ராஜகுமாரி, சாந்தகுமாரி, பி. பானுமதி,
கீழே சுந்தரிபாய் கொத்தமங்கலம் மனைவி.
........
இந்த புகைப்படம் எனக்கு அனுப்பி பிரமிக்க வைத்தவர் சித்ரா சம்பத். அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.
கிருஷ்ணன் நம்பியின் தம்பி வெங்கடாசலம் கூட என் கவனத்துக்கு கொண்டு வந்தார்.





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.