Share

Sep 3, 2021

சேவல் முட்டை


அசோகமித்திரனுக்கு கொடுத்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று எதிர் பார்த்துக் கொண்டிருந்த வேளையில், மளையாள சினிமா பாடலாசிரியர் ஒருவருக்கு ஞானபீடப் பரிசு கொடுக்கப்பட்டது.                                                 அசோகமித்திரனிடம் அலை பேசி உரையாடிய போது சொன்னார் 'இங்கே செல்வாக்கு மிகுந்த திரை பாடலாசிரியருக்கு இந்த விஷயம் மிகுந்த ஊக்கம் ஏற்படுத்தும். தனக்கான முயற்சிக்கு வேகமாக செயல் பட வைக்கும்.'


அப்போது கண்ணில் ஒரு சேதி விழுந்தது. 

ஒரு முன்னணி தமிழ் நடிகர் ஏதோ ஒரு மலையாளப் படத்துக்கு பாடல் எழுதுவதாக. 


அதிர்ஷ்டக்காரனுடைய சேவல் கூட முட்டையிடும். 


கி. ராஜநாராயணனுக்காவது அடுத்து ஞான பீட விருது கிடைத்து விடாதா? என்று எதிர் பார்த்திருந்தார். ஒரு ஜோதிடர்  "உங்களுக்கு ஒரு மிகப்பெரிய கௌரவம் கிடைத்த பின் 

உங்கள் ஆயுள் முடியும் " என்று அவரிடம் சொல்லியிருந்ததை என்னிடம் 

கரிசல் கதை நாயகன் சொன்னதுண்டு. 

வருடங்கள் ஓடி அவரும் போய் சேர்ந்து விட்டார். 

அசோகமித்திரன், கி. ரா 

இருவருக்குமே எட்டாக்கனியாகி விட்ட 

ஞானபீடப் பரிசு.

.. 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.