Share

Aug 22, 2021

You never know a man until you stand in his shoes

 27.03.1983ல் க்ரியாவில் ’நடை’ இதழ்களின் பழைய நான்கு பிரதி, ’கசடதபற’ ஒரு ஐந்து பிரதிகள் விலைக்கு கிடைத்தது. சில பிரக்ஞை இதழ்களும். 


அன்று அங்கு எஸ்.வி.ராஜதுரை, சி.மணி, க்ரியா ராமகிருஷ்ணன் ஆகியோரை சந்தித்தேன்.                     சி.மணி தன்னுடைய ‘வரும் போகும்’ கவிதைத்தொகுப்பில் கையெழுத்திட்டு தந்தார்.


2003ல்திருச்சியில் இருந்து திருப்பூருக்கு போக நேர்ந்த போது

 இந்திரன் சொன்னது போல‘ பார்த்துப் பார்த்து சேர்த்திருந்ததெல்லாம் கழுதைப்பொதியாக சேர்ந்திருக்க', 

லக்கேஜை குறைக்க வீட்டின் கொல்லையில் பழைய கணையாழி, நடை, கசடதபற, பிரக்ஞை, ஞானரதம், ’மேலும்’, நிறப்பிரிகை, இன்னும் பல சிறு பத்திரிகை இதழ்களையெல்லாம் கொல்லைப்புறத்தில் வைத்து விட்டு திரும்பிப்பார்க்காமல் ஜாமான்கள் ஏற்றிய வேனில் குடும்பத்துடன் கிளம்பினேன். 

திரும்பிப்பார்த்தால் இலக்கிய இதழ்கள் எல்லாம் குழந்தைகள் போல ”எங்களை விட்டு விட்டுப்போகிறாயே” என்று கதறுவது போல காதில் கேட்குமே.


Sometimes you have to let go of what you can't live without.


சென்னைக்கு 2015 செப்டம்பர் மாதம் குடும்பத்துடன் வர நேர்ந்த போது

 ஒரு ஆயிரம் புத்தகங்கள்,

காலம் காலமாக சேர்த்து வைத்திருந்த இரண்டு சூட்கேஸில் இருந்த நூற்றுக்கணக்கான கர்னாடக சங்கீத, இந்துஸ்தானி சங்கீத இசை கேசட்கள் எல்லாவற்றையும் தூக்கி வீசிவிட்டு

 கிளம்ப நேர்ந்து விட்டது.

( " தேர்ந்த இசைத்தொகுப்புகளைச் சேகரம் பண்ணி வைத்திருப்பவர் ராஜநாயஹம்” என்று கி.ராஜநாராயணன் 'கதை சொல்லி’பத்திரிக்கையில் எழுதியிருக்கிறார்.)


You never really know a man until you stand in his shoes and walks around in them

- a popular quote of Atticus in " To kill a mocking Bird "

( 1962 movie)


க. நா.சு சொல்வது போல “எல்லாமே ரொம்ப முக்கியம் தான். ஆனால் எதுவுமே அவ்வளவு முக்கியமில்லை.”


..

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.