Share

Mar 8, 2020

முயலின் பார்வையில்



ரொம்ப வருடம் முன் கணையாழியில்
 படித்த தத்துவ கதை.

ஒரு ஆள் தன் வீட்டில் முயல்கள் வளர்க்கிறார்.

 அதில் துரு துரு முயல் ஒன்றை
ஒரு விதமாக பழக்குகிறார்.
அது மூன்று குட்டிகரணம் போடவேண்டும்.
உடனே இவர் ஒரு காரட் அதற்கு தருவார்.

வீட்டிற்கு விருந்தாளி யாராவது வரும்போது அவர்களுக்கு தன் கொல்லையில் வளர்க்கப்படும் முயல்களை காட்டும்போது
இந்த குறிப்பிட்ட முயலை கூப்பிட்டு
அது இவர் முன் மூன்று குட்டிகரணம்
போடுவதை காட்டி
விருந்தாளிகள் ஆச்சரியப்படும்போதே
குட்டி கரணத்திற்கு ஊக்க போனஸாக
காரட் கொடுப்பார்.

அந்த முயல் தன் சக முயல்களிடம் சொன்னதாம்
 " இந்த ஆள் ரொம்ப தமாஷான ஆள். வேடிக்கையை பார்.
நான் இப்போ குட்டிகரணம் போடுறேன்.
இவன் ஓடி வந்து காரட் கொடுப்பான் பார்."

மூன்று குட்டிகரணம் போட்டது முயல்.
ஓடி வந்து அவர் காரட் கொடுத்தார்.
ஏனைய முயல்கள்
அந்த ஆள் செய்யும் சர்க்கஸை
மிகவும் ரசித்து மகிழ்வது வழக்கமாகிவிட்டது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.