Share

May 17, 2019

தேவதச்சனின் பொன் துகள்


தேவதச்சனின் துளிகள் தெறிக்கும் போதெல்லாம்
’ஆடு கீரையை மேய்வது போல இவர் வாழ்வின் வண்ண கணங்களை  மேய்பவர்’ என்று தோன்றும்.

சேதாரமின்றி பொன்னை நகையாக்கும் கலை தேவதச்சனுக்கு கைவந்திருக்கிறது.

”காற்று ஒரு போதும் ஆடாத மரத்தைப் பார்த்ததில்லை
காற்றில்
அலைக்கழியும் வண்ணத்துப்பூச்சிகள், காலில்
காட்டைத்தூக்கிக்கொண்டு அலைகின்றன

வெட்ட வெளியில்
ஆட்டிடையன் ஒருவன்
மேய்த்துக்கொண்டிருக்கிறான்
தூரத்து மேகங்களை
சாலை வாகனங்களை
மற்றும் சில ஆடுகளை!”


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.