Share

Sep 1, 2012

மு.க.முத்து

Nov 2, 2008



கருணாநிதி வசிக்கும் அதே தெருவில் என் மறைந்த நண்பன் சவ்வாஸ் முபாரக்கின் சகோதரி பாப்பாத்தியக்கா வீட்டுக்கு(1986ல்) போயிருந்தேன் . எதிர் வீடு முக முத்து வீடு.
அங்கிருந்து கிளம்பும்போது கருணாநிதி வீட்டிலிருந்து வெளியேறிய நபர் முழு போதையில் சட்டை பட்டன் அனைத்தும் திறந்திருந்த நிலையில் நடக்க முடியாமல் நடந்து வந்துகொண்டிருந்தார். முக முத்து ! தன் வீட்டில் நுழைந்த அவர் அங்கே எதிர் வீட்டில் நின்றிருந்த என்னையும் சவ்வாஸ் பரூக்கையும் பார்த்துகொண்டே நுழைந்தார். உடனே வெராண்டாவில் உட்கார்ந்தார். உள்ளே இருந்து ஒரு ஆள் அப்போது சாப்பாட்டு தட்டை கொண்டு வந்து வைத்தவுடன் அதிலிருந்த மாமிசத்தை உடல் மடிய குனிந்து ஜவ்வை இழுத்து கடித்து சாப்பிட்டார்.

வீழ்ச்சி என்பதன் முழு படிமம்.
கோட்டையில பொறந்தாலும் விதி போட்ட புள்ளி தப்புமா ?
குழந்தையாய் இருக்கும்போது தாயை இழந்து சிறுவனாய் இருக்கும்போது தாயற்ற பிள்ளை அப்பா மீட்டிங் பேசி விட்டு படுக்கும்போது பாட்டியாலும் மாறன் தாயாராலும் வளர்க்கப்பட்ட முத்துதிருவாரூரில் அப்பா அசதி தீர கால் பிடித்து விடுவார. அப்பா அந்த காலத்தில் நூறு ரூபாய் தருவார். முக முத்து சேட்டை செய்தால் அடிக்க கூட தெரியாது. தூசி தட்டுவது போல் இவர் உடம்பில் தட்டி ' சீ ராஸ்கல் ! ராஸ்கல் சீ ' என்பார் !

எழுபதுகளில் கட்சி உடைந்த நிலையில் கருணாநிதி அரசியல் சொல்லடி கல்லடி படும் போதும் அப்போது முக முத்து திமுகவின் அரசியல் எதிரிகளால் அரசியலில் பகடை யாய் உருட்டப்பட்ட போது அவரை புத்திர பாசத்தோடு பாதுகாத்து தன் எதிரிகளை நோக்கி சொன்னார் " பாவம் அவன் ஒரு இளந்தளிர் ! அவனை விட்டு விடுங்கள் !"

அவரின் புத்திர பாசத்திற்கு அக்னி பரீட்சை வைத்து தந்தையை சித்திரவதை செய்ய ஆரம்பித்தார் முக முத்து. ஜெயலலிதா கொடுத்த ஐந்து லட்சத்திற்கு கூட விலைபோனார் என்பது கருணாநிதி எதிர்கொண்ட மிக மோசமான சோகம்.
எம்.ஜி.ஆர் முதல்வராயிருந்தபோதே,ஒரு முறை முத்து கோவித்துக்கொண்டு ராமாவரம் தோட்டத்திற்கு போய்விட்டார். ஆனால் எம்.ஜி.ஆர் அவரை சமாதானப் படுத்தி ‘நான் அப்பாவிடம் பேசுகிறேன்’ என்று திருப்பி அனுப்பி விட்டார்.

பைபிளில் கெட்ட குமாரன் என்று ஒரு கதை உண்டு .
ஒரு வழியாக அவருடைய வனவாசம் முடிந்து வீடு திரும்பிய நிகழ்வை சில மாதங்களுக்கு முன் தமிழ் பத்திரிக்கைகள் அனைத்தும் கொண்டாடின.திருந்திய கெட்ட குமாரன்!
ஆனால் இந்த பத்திரிகைகள் சில விஷயங்கள் பற்றி எந்த கேள்வியும் முன் வைக்கவில்லை.

முக முத்து வின் மனைவி,(தாய்மாமன் சிதம்பரம் ஜெயராமன் மகள்) குழந்தைகளோடு அவரை விட்டு பிரிந்த பின் இவர் நடத்திய வாழ்க்கையில் சம்பந்த பட்டவர்கள்.
நெல்லூர் அனுசூயா இவருக்கு வேலைக்காரியாக வந்து இவருக்கு ஒரு பெண் மகவை பெற்ற பின் வீட்டம்மா ஆகியதால் அதன் பின் வேலைக்காரியாக வந்தசீர்காழி பானு வும் இவருக்கு மனைவியாகி பானு இல்லாமல் முத்துவால் வாழவே முடியாது என்ற நிலை முக முத்துவுக்கு ஏற்பட்டது . பானுவும் முக முத்து வும் "மூன்று தமிழ் தோன்றியது உன்னிடமோ ?" பாடி லாயிட்ஸ் காலனி ஹௌசிங் போர்டில் தினமும் அக்கம் பக்கத்தார் கேட்க கச்சேரி நடத்தியது . சிவாஜி கணேசன் இறந்த போது முக முத்து தி நகர் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பிராந்திகடையை திறக்க சொல்லி அனுசூயா , பானு வுடன் காரில் வந்து (அழகிரி கொடுத்த கார் !) ரகளை செய்தது -"ஏண்டா சிவாஜி செத்துட்டா உலகமே அழிஞ்சிடுச்சா .கடையை திறங்கடா டே ."

அண்ணாவின் பிரபல நாடகம் . 'வேலைக்காரி ' திரைப்படமாகவும் வந்து அவருக்கு தமிழகத்தின் பெர்னாட் ஷா பட்டம் வாங்கி தந்த வேலைக்காரி காவியம் ! முக முத்து வுக்கு அண்ணா மீது ரொம்ப பிரியம். அதனால் வேலைக்காரி மீதும் !
அனுசூயா முகமுத்து மகள் ஷீபா பீஸ் கட்ட முடியாமல் பள்ளியில் இருந்து டிஸ்மிஸ் ஆகிஇருக்கிறாள். அறிவுநிதியின் ஆட்கள் மிரட்டி அடிக்கவும் செய்யும் போது போலீசுக்கும் போக முடியாமல் அனுசூயா மிரண்டு "இவன் கிட்ட சிக்கிகிட்டேன். போதா குறைக்கு நானே எனக்கு ஒரு சக்களத்தியை தேடிகொண்டேன் ' என்று கண்ணீர் விட்ட விஷயம்.

அறிவு நிதிக்கு அப்பா மீண்டும் கிடைத்து விட்டார் . சிதம்பரம் ஜெயராமன் மகளுக்கு புருஷன் திருந்தி விட்டார் . சரி
ஆனால் மற்றொரு தாரம் அனுசூயா,
முக முத்து மகள் ஷீபா
அதற்கு அடுத்த தாரம் பானு
இவர்கள் நிலைமை என்ன ?

அறிவு நிதியின் அப்பா தானே ஷீபாவுக்கு அப்பா !
ஷீபா நிலை பற்றி கனிமொழியின் புரிதல் என்ன ?
கனிமொழியின் தந்தை ஷீபா வாழ்வுக்கு ஏதேனும் தீர்வு கண்டாரா ?

..............

Mar 26, 2009



Spoiled Child !


முக முத்து தன் மூன்றாவது மனைவி பானுவுடன்(இரண்டாவது மனைவி அனுசூயாஎன்ன ஆனார்?  அவரும் வேலைக்காரி ஆக முக முத்துவிடம் வந்தவர் தான்.அந்த குழந்தைஷீபாராணி? ) திருவாரூரில் புதிதாய் வாங்கப்பட்ட வீட்டில் செட்டில் ஆகி இருக்கிறாராம் .குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகையில் படித்தேன்.


முகமுத்து சொந்தக்குரலில் பாடிய ஒரு பாடல்

’அணையாவிளக்கு’ படத்தில்

‘கூன் பிறையை போற்றிடுவோம்
குர் ஆனை ஓதிடுவோம்
மேன்மை மிகு மெக்காவின் திசை நோக்கி பாடிடுவோம்
நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா
பிறர் நலனை விரும்பி நானும் வேண்டவா
யாரும் வருவார் யாரும் தொழுவார்
நாகூர் ஆண்டவன் சன்னிதியில்
நானும் உண்டு நீயும் உண்டு
நபிகள் நாயஹம் முன்னிலையில்’

இந்தப்பாடலை நான் என் முஸ்லிம் நண்பர்களை சந்திக்கும்போது எப்போதும் பாடுவேன்.
 ‘ ராஜநாயஹம்!நீங்க எங்க மார்க்கத்தில் பிறந்திருக்க வேண்டிய ஆள்!’ என்று நெகிழ்வார்கள்.

முகமுத்து பாடிய இன்னொரு பாடல்

‘சமையல்காரன்’ படத்தில்

’சொந்தக்காரங்க எனக்கு ரொம்பப் பேருங்க!
நான் சொத்தா நினைக்கிறது உங்க அன்பைத்தானுங்க!’

தாயில்லாமல் வளர்ந்த பிள்ளை.Spoiled Child!

முத்து பாடல் கச்சேரியில் அப்பா வசனம் எழுதி கல்யாண்குமார் நடித்த ’தாயில்லாப் பிள்ளை’ படத்தில் டி.எம்.எஸ் பாடிய பாடலை எப்போதும் அனுபவித்துப் பாடுவார்.

‘தாயில்லாப் பிள்ளை
பேச வாயில்லாப் பிள்ளை’

அதில் சரணமுடிவில்

‘இன்று ஊருமில்லை உறவுமில்லை யாரும் இல்லையே
நான் கடந்து வந்த பாதையிலே அமைதி இல்லையே
நான் தாயில்லாப்பிள்ளை பேச வாயில்லாப்பிள்ளை’


ஆனால் முத்துவின் புலம்பல் நிற்கவில்லை. உதாசீனப்படுத்தப்படுவதாக ஒரு வேதனை!
அதனால் தன் மோசமான நடவடிக்கைகளால் உறவுகளை சிரமப்படுத்தி அவர்களிடம் கெட்ட பெயர் வாங்கியவர் . நல்லா இருந்தாலே உறவுகள் சீராக இருக்க முடியாத உலகம் இது .தம்பி தமிழரசுவின் மகள் திருமணத்திற்கு கூட அதிருப்தி காரணமாக மு க முத்து போகவிரும்பவில்லை . குடித்து விட்டு முன் ஒரு தடவை அப்பாவை பார்க்க மாடியேறிய போது முக முத்துவை பிடித்து கீழே தள்ளி விட்டார் மு க தமிழ் என்ற வருத்தம் கூட மறந்திருக்க முடியாது .
உறவுகளுக்கு இவரால் பல வருத்தங்கள் ! குடும்பத்தில் மூத்த பிள்ளை சரியில்லை என்ற வருத்தம் அப்பாவுக்கும் ,சகோதர சகோதரிகளுக்கும் இருக்கத்தானே செய்யும் . இவருக்கு அவர்கள் உதாசீனம் செய்கிறார்கள் என வருத்தம் .
தயாநிதி மாறன் -கருணாநிதி இணைப்பு விஷயத்தில் தன் மகன் அறிவுமதியை கலந்து கொள்ளவில்லை .தன் குடும்பத்தை க்ரூப் போட்டோ எடுத்த போது ஒதுக்கி விட்டார்கள் என முக முத்து வுக்கு வருத்தம். தயாளு அம்மையார் , ராசாத்தி அம்மாள் பிள்ளைகள் வேறு , பத்மாவதி பெற்ற முத்து வேறு , அவர்கள் கண்ணில் வெண்ணை , தன் கண்ணில் சுண்ணாம்பு என்ற ஆதங்கம் .

முக அழகிரி மீது மட்டும் முத்துவுக்கு பாசம் பிரியம் இருக்கிறது .
"அப்பாவுக்கு புகழ் போதை ! அழகிரி நல்ல தம்பி !
ஸ்டாலின் மாறவேண்டும் ! "
இப்படி பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் பேட்டி கொடுத்தால் குடும்பமும் கட்சியும் வருத்தப்படாமல் இருக்க முடியுமா .மேலும் மேலும் தந்தையுடனான உறவை சிக்கலாக்கி கொள்கிறார் . முத்துவின் எஞ்சிய காலம் அவ்வப்போது பத்திரிக்கைகளுக்கு புலம்பி ,புலம்பி ஆதங்க பேட்டி கொடுத்தே கழிந்து விட நேரும் என்பது அவரது மிஞ்சிய துரதிர்ஷ்டம் தான் .

முத்து உடல்நிலை காரணமாக , மன நிலை காரணமாக திமுக வுக்கு ஆதரவாக பிரச்சாரத்திற்கு போக முடியாவிட்டாலும் , அவர்  துணைவி பானு தான் கட்டாயம் அழகிரியின் நல்ல குணத்திற்காக தேர்தல் பிரச்சாரம்
செய்ய ப்போக போவதாக சொல்லியிருக்கிறார் !
ராசாத்தி அம்மாள் ஒரு போதும் தேர்தல் பிரசாரங்களில் நேரடியாக ஈடு பட்டதே இல்லை .
அப்பாவுக்கு பிறகு கட்சி பல பல வகையில் பிளவு பட்டு போகும் .
'நிதி' குடும்பமும் தான் .

http://rprajanayahem.blogspot.in/2009/08/blog-post_26.html


http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_30.html


 
 

2 comments:

  1. எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே
    அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே

    இங்க அன்னையே இல்லை. தந்தையின் வளர்ப்பு அதற்குத் தக்க வகையில் இல்லை. பெரிய வீடுகளில் பொதுவாக நடப்பதுதான். மு.க.முத்துவின் மீது மட்டும் தவறில்லை என்பது என் கருத்து. மு.க.முத்து மட்டுமா இரண்டு மூன்று பெண்களை மனைவியாக்கிக் கொண்டார்?! சிலர் நாகரிகமாகச் செய்வார்கள். அவ்வளவுதான் வேறுபாடு.

    ReplyDelete
  2. இவ்வளவு உட்டாலக்கடி‍ வேலையை அண்ணன் செய்திருக்கிறாரா? வியப்பாக இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு‍ முன்பு இவர் தன் தந்தையைப் பார்த்து பேசிய போது‍ வாரப் பத்திரிகைகள் இவரைப் பற்றி எழுதியதும், குறிப்பாக இவர் ஏதோ தியாக சீலர் போல கட்டுரை எழுதியதும் நினைவுக்கு‍ வருகிறது.

    மலர்மன்னன்,
    கோவை,

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.