Share

Aug 25, 2024

பரணில் கிடக்கும் பழைய கணக்கு


எஸ். ராமகிருஷ்ணன் முன்னதாகத் திருச்சியில் சொன்ன விஷயம் 
 'ஊட்டியில் தளைய சிங்கத்திற்கு நடந்த தொழுகை' கட்டுரை பற்றி
 'உலகத்தையே ஒரு கலக்கு கலக்கிட்டிங்க இந்த ஒரு கட்டுரையில் - தளைய சிங்கத்தை நினைத்தால் இனி யாரும் ராஜநாயஹத்தை நினைக்காமல் இருக்க முடியாது. நீங்கப் பாட்டுக்கு உண்மையெல்லாம் எழுதிட்டீங்க அவன் (ஜெயமோகன்) இன்னமும் உங்களைக் கண்டபடி திட்டி தாறுமாறாக இலங்கை பத்திரிகைகளில் கூடப் பேட்டி தருகிறான்'

தொடர்ந்து 11-7-2004 அன்று திருப்பூரில் சாகித்திய அகாதெமி சார்பில் 'கதை அனுபவம்' என்பதாக நடந்தவைபவத்தில் நாஞ்சில் நாடன் நிகழ்ச்சி முடிந்தபின் வலிய வந்து  வணக்கம் சொன்னார். 

குற்றமுள்ள நெஞ்சு. நெஞ்சுவலிக்காரர் என்பதால்  அமரிக்கையாக அவருடைய அவதூறுகள் பற்றிக் கேட்டேன். யார் மீதும் சேறடிக்காத எழுத்துத் தன்னுடையது என்று பிரச்சாரம் செய்பவராயிற்றே என்று ஒரு நான்கைந்து கேள்விகள் கேட்டேன். 

நாஞ்சில் நாடன் 'என்னை மன்னிச்சிக்கங்க ராஜநாயஹம்' என்று கெஞ்சினார்.
'திண்ணைக்கு நான் அனுப்பிய கட்டுரையை ஜெயமோகன் திருத்தி எழுதினான். அதற்கு என்னிடம் ஒப்புதல் கடிதம் கேட்டான் நான் தர மறுத்துவிட்டேன். இதனால் அவனோடு ஆறுமாதம் நான் பேசவில்லை. என்னை மன்னிச்சிக்கங்க. நான் ஒண்ணுக்கு போகனும்' என்று தவித்தவிக்க ஆரம்பித்தார். 

காலச்சுவடில் கண்ணன் இவருடைய கட்டுரையை எடிட் செய்ததற்கும் கோபப்பட்டார். 
இவர் அப்போதைய இருபத்தி நாலு எழுத்தாளரகளுக்கு ஓட்டு போட்ட விஷயத்தை (என்னா டெக்னிக்)எடிட் செய்தால் இவருக்குக் கோபம் வராதா என்ன? 

தொடர்ந்து அவர் செய்த பெரிய சேவை பற்றிய திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். 
நாச்சார் மட விவகாரம் போல இன்றும் ஆறு வெர்சன் ஜெயமோகன் குழாமிடம் இருக்கிறது. அதையெல்லாம் வெளியிடக் கூடாது என்று நாஞ்சில் நாடன் தான் தடுத்தாட் கொண்டார். அப்படி மட்டும் தப்பித்தவறி இவர் செய்யலைன்னு வச்சுக்குங்க இவர் தடுத்தாட் கொள்ளலைன்னு வச்சுக்குங்கக்க... எங்கப்பா... அடேங்கப்பா.

 சீனியர் எழுத்தாளன் தன்னுடைய கட்டுரையை ஒஜூனியர் திருத்தி எழுதிவிட்டான் ஒப்புதல் கடிதமும் கேட்டான் என்று சொல்வதைப் பற்றி இலக்கிய உலகம் சிந்திக்க வேண்டும்.விலங்கும் நாணிக் கண் புதைக்கும் இந்நிகழ்வு.

நாஞ்சில் நாடன் இதற்கு அப்போதே எதிர்ப்புத் தெரிவித்திருக்க வேண்டாமா? பகிரங்கப் படுத்தியிருந்தால் யார் மீதும் சேறடிக்காத எழுத்து என்று நிரூபித்திருக்கலாம். 
பதிலாக என்ன செய்கிறார். ஜெயமோகனோடு ஆறுமாதம் பேசாமலிருக்கிறார்.
 பின்னர் ஜெயமோகன் நூல்கள் வெளியிட்டு விழாவில் ''ஜெயமோகன் என்னய்யா கொலையா செய்துவிட்டார். கூட்டம் சேர்ந்து கிட்டு தாக்குறீங்க" என்று கொக்கரக்கோ கூவல் விடுகிறார் நாஞ்சில் நாடன். நாஞ்சில் நாடன் நெஞ்சில் நஞ்சு.

இப்படி இன்னொருவர் எழுதியதைத் திருத்தி எழுதிவிட்டு ஜெயமோகன் 'என் நேர்மை ஒருபோதும் ஜயத்துக் குள்ளானது இல்லை' என்று துண்டறிக்கையில் பீற்றிக் கொள்ளுவதை என்னவென்று சொல்வது? இதுதான் அறிவார்ந்த கயமையா? படிச்சவன் சூதும் வாதும் பண்ணினால் ஜயோவென்று போவான் என்று பாரதி சொல்லியிருக்கிறான்.எழுத்தாளனையும் சேர்த்துத் தான்.

ஊட்டி கருத்தரங்கத்தில் நடந்தவைகளை அப்படியே சத்தியமாக நான் எழுதிய பின் இவர்களால் என்ன பதில் தரமுடியும் என்று தான் நினைத்தேன். 
ஆனால் 'கழுதைப் புணர்ச்சி பற்றிய செயல்முறை விளக்கம். எல்லோரிடமும் தான் குறியிருக்கிறது. அதை எப்போது கையிலெடுத்துக் கொஞ்சுவது கிடையாதா' என்று புளுகி அவதூறு செய்தபோது நான் உடைந்து போனேன். 
அங்கே அந்தக் கூட்டத்தில் எனக்கு 'Alienation' ஏற்பட்டுச் சொல்லேர் உழவர்களின் பகைக்கு நான் ஆளானதோடு இப்படி ஒரு கடுமையான அவதூற்றையும் தாங்கும்படியானதற்கு நாஞ்சில் நாடான் 'நானில்லே ஜெயமோகன் தான் இப்படி இஷ்டத்துக்கு எழுதினான்' என்று சாவகாசமாகச் சொல்வதைப் பாருங்கள். 

இவர்கள் தரத்திற்கே கேள்வி கேட்டால் இவர்களிடம் பதில் என்ன? 
முட்டாள்தாசாக ராஜநாயஹம் நடித்தபோது கழுதையாக நடித்தவர் யார்?.... 

முட்டாள்தாசுக்கு Sexually Transmitted Desease என்ற வார்த்தை தெரியாது. அதனால் மதுரை வட்டார வழக்கில் 'பொம்பளைசீக்கு' என்கிறான். வட்டார வழக்கில் ஒரு பாத்திரம் பேசுவதற்கு எழுதுபவன் பொறுப்பா? பெண்ணியத்திற்கு எதிராக ராஜநாயஹம் பேசியதாக எழுதியதாக நாஞ்சில் நாடானின் அபத்தக்குற்றச்சாட்டு.

...

தூங்காம சாப்பிடாம "பீ" பேலாம எழுதின புத்தகம்
ஒரு அனானி ' அவங்க தான் ஒன்னை கண்டுக்கவே இல்லையே. ஏன் அவங்களை பத்தி எழுதுறே' ன்னு மொட்டை ஈமெயில் போடுறான்.
குலைச்சிகிட்டே தானேடா இருக்காங்கே.
சுந்தர ராமசாமி செத்தப்ப ஒருத்தன் தூங்காம , "பீ "பேலாம, சாப்பிடாம ஒரு புத்தகம் எழுதினான்.
அதிலே 154 ம்பக்கத்திலே ராஜநாயஹத்தால தான் சுந்தர ராமசாமி கூட பகையே வந்ததுன்னு பீடிகையா சொல்லியிருக்கான்.
தூங்காம,பேலாம,சாப்பிடாம எழுதினா விளங்குமா?
தளையசிங்கம் கருத்தரங்கம்னு எழுதாம கவிதை பட்டறைன்னு எழுதி ஆரம்பிச்சி அந்த பாரா பூரா பொய் தான். 
ராஜநாயஹத்தால தான் சுரா கூட இவனுக்கு பகை யாம்.

டே .. இந்த ஜெகம் ப்ராடால தானே 
சுரா மனம் நொந்து செத்தாரு. அவரை எதுத்து இவன் பண்ண அரசியலும் நம்பிக்கை துரோகமும் கொஞ்சமா?
இதிலே அவர் செத்ததும் இவன் தூங்கலே பேலலே சாப்பிடலே. எழுதிக்கிட்டே இருந்தானாம்.
இன்னொரு காமெடி- வாழ்க்கையிலே முதல் முதலா 'பீர்' குடிச்சிக்கிட்டு ' பீர்' மட்டும் குடிச்சிகிட்டே எழுதினானாம்.

இவனோட பிரதான ஜால்ரா
காஞ்ச காட்டான் ஊம்ப முனி
 ' கதாசிரியனை கொலை செய்யனுமா ?' கட்டுரையிலே பேடித்தனமா கடைசியிலே உளறி இருக்கான். இவன் வண்ட வாளத்தை தண்டவாளத்தில ஏத்தியாச்சி. இன்னும் காவிய தலைவி சவுகார் ஜானகி மாதிரி உருக்கமா 'வேட்டியில புல்லழுக்கு,புடுக்குலெ சொறிசிரங்கு'ன்னுஅழுகிறான்.
இதிலே எந்நேரமும் என்னை திட்டிகிட்டே
இருக்கான்னு தகவல் .

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.