Share

Jul 14, 2020

ஹை கோர்ட் ஜஸ்டிஸ் அக்பர் அலி

ஐகோர்ட் ஜஸ்டிஸ் அக்பர் அலி.
 செங்கல்பட்டு ஜட்ஜாயிருக்கும்போது
 காஞ்சி சங்கராச்சாரியாரைத் 
தூக்கி உள்ளே வைத்தவர் இவர் தான். 

முன்னாளில்
ஈகா தியேட்டருக்கு பின் பக்கம் 
ப்ரொஃபசர் சுப்ரமணியம் தெருவில் இருந்த 
மலையாளி முஸ்லிம் எஜுகேஷனல் சொசைட்டி ஹாஸ்டலில் நான் ஒருவன் தான் சினிமாக்காரன். 
மற்றவர்கள் வக்கீல்கள், டாக்டர்கள். 
இன்னும் இன்கம்டாக்ஸ்,
 டி. வி., ஏர்லைன்ஸ், பேங்க் இப்படி.. 

சினிமா அசிஸ்டெண்ட் டைரக்டரான
 என்னை "டைரக்டர்" என்று தான் கூப்பிடுவார்கள். எல்லோருக்கும் வயதில் ஜுனியர் நான் தான். 

மெஸ் சாப்பாடு அசைவம் தான். 
ஒவ்வொரு நாளும் மட்டன், சிக்கன், ஃபிஷ், பீஃப் என்று மெனு. இங்கே தான் 
நான் பீஃப் சாப்பிட பழகினேன். 

அப்போது வக்கீலாக ப்ராக்டிஸ் செய்து கொண்டிருந்த அக்பர் அலியும் 
இன்னொரு வக்கீல் கலாமும் 
எம்.இ.எஸ் ஹாஸ்டலில்
 ட்வின்ஸ் போல சேர்ந்தே தான் இருப்பார்கள். 
தமிழர்கள் தான். 

எம். இ. எஸ் ஹாஸ்டல் வாழ்க்கை எங்களுக்கெல்லாம் 
 மறக்க முடியாத ஒன்று. 

என் ரூம் மேட்  மலையாளி அபு பக்கர்
 தலைசிறந்த மனிதாபிமானி. 

எனக்கு உடம்பு சரியில்லாமல் போன போது பக்கத்து அறையிலிருந்த டாக்டர் ஒருவர் இன்ஜெக்ஸன் போட்டு டேப்லெட்ஸ் கொடுத்தார். 

எல்லோரும் ஹாஸ்டலை விட்டுக் கிளம்பிய பின் எனக்கு போரடிக்கக்கூடாதே என்று அபுபக்கர் ‘படங்களுடன் கூடிய பிரமாதமான ஒருசெக்ஸ் புக்’ கொடுத்து விட்டு ஆபீஸ் கிளம்பினார்

.... 

அறிவாலயத்தில் ஒரு திருமணத்தில் 
என்னைப் பார்த்துவிட்டு பக்கத்தில் இருந்த  நண்பரிடம் உயர் நீதிமன்ற நீதியரசர் அக்பர் அலி  சொன்னார். 
 “ I meet this BOY after thirty years”

அவருக்கு இப்போதும் நான் பையனாகவே தோற்றம் தருகிறேன் என்பது சற்று வித்தியாசமாக, சந்தோஷம் தருவதாக இருந்தது. காலயந்திரத்தில் ஏறி பின்னோக்கி 
பயணம் செய்த சந்தோஷம். 

எம். இ. எஸ் ஹாஸ்டலில் எங்களோடு இருந்த மலையாள நண்பர் அபுபக்கர் அவர்களின் மகள் திருமணம் அண்ணா நகரில் நடந்தது. 
  
அங்கே என்னைப் பார்த்த போது
 நீதியரசர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றிருந்த                             அக்பர் அலி அவர்கள் 
என்னை "டைரக்டர்" என்று தான் அழைத்தார். 

...

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.