Share

Jul 4, 2020

முரசொலி மாறன்

'மறக்க முடியுமா?' சீரியஸான சோகப்படம். 
"காகித ஓடம் கடலலை மேலே போவது போலே"

'வாலிப விருந்து ' அட்டகாசமான 
பொழுதுபோக்கு சித்திரம். 
"ஒன்ட்ரக்கண்ணு டோரியா, சென்னப்பட்ணம் போறியா
போறியா, போறியா, 
கப்பலா? காரிலா? ஓசி ரயிலா?"

இரண்டையும் இயக்கியவர் முரசொலி மாறன். 

 அன்னையின் ஆணை போல, இருபது படங்களுக்கு மேல் கதை வசனம் எழுதியிருக்கிறார். 
படத்தயாரிப்பாளராக பெரும் அனுபவஸ்தர். 

சினிமாவில் சம்பந்தப்பட்ட யாரும் 
வேறு துறை போனாலும் அந்த அனுபவங்கள் பற்றி கட்டாயம் பேசுவார். எழுதுவார். 
யாரும் இதற்கு விதிவிலக்கல்ல. 

கருணாநிதி அரசியலில் எவ்வளவு பிசியானாலும் அவ்வப்போது சினிமாவில்
தன் அனுபவங்களை எப்போதுமே 
பேசி எழுதி வந்தவர். 
சுவையான திரை சம்பவங்களை 
எப்போதும் கூறுவார்.

ஆனால் ஒரு அபூர்வமான அதிசயம்
 முரசொலி மாறன்! 
நிறைய படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். படங்களை தயாரித்துள்ளார், இயக்கியுள்ளார்.

ஆனால் அவர் திரைப்படத்துறையை விட்டு விலகிய பின் தமிழ் சினிமா அனுபவங்கள் பற்றி பேசியதே கிடையாது. எழுதியது கிடையாது .அவர் முழு நேர அரசியல்வாதியானதும், டெல்லி அரசியலில் பல முறை மத்திய அமைச்சர் ஆனதும்
 ' அந்த காலத்திலே அந்த படத்துக்கு வசனம் எழுதும் போது .... அந்த படத்தை நான் இயக்கிய போது ' - இப்படி ஒரு வார்த்தை .. மூச் ...ம்ஹூம் ..

மனித சுபாவத்தில் இது ரொம்ப ரொம்ப 
அபூர்வமான விஷயம்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.