Share

Jul 6, 2020

உதயநிதி ஸ்டாலின்

இன்று உதயநிதி ஸ்டாலின் என்னிடம்
 செல் பேசியில் தொடர்பு கொண்டு பேசினார். 
'சினிமா எனும் பூதம் இப்போது தான் படித்து முடித்தேன். உடனே உங்களிடம் பேசுகிறேன். '

' இயக்குநர் கரு. பழனியப்பன் மூலம் தான் உங்கள் புத்தகம் பற்றி தெரிய வந்தேன். புத்தகத்தை பற்றி உங்கள் எழுத்தையே அவர் டிவிட்டரில் வெளியிட்டிருந்ததை பார்த்தேன்.' 

பழனியப்பன் தான் புத்தகத்தை கொடுத்தார். 

Credit goes to Karu. Palaniappan. 

புத்தகத்தின் ஒவ்வொரு கட்டுரை பற்றியும் கோடிட்டு காட்டி 'உங்களால் இப்படி எவ்வளவு விஷயங்கள் பற்றி எழுத முடிந்திருக்கிறது' 

எந்த ஆயத்தமும், தயாரிப்புமின்றி நான் எழுதியிருக்கிறேன் என்பதை அவர் கண்டு பிடித்து பேசினார் என்பது அவருடைய வாசக மேன்மையை உணர்த்தியது. 

நூலில் என் ஆங்கில மேற்கோள்களை 
சிலாகித்து சொன்னார். 

சினிமா எனும் பூதம் நூலில் படிக்கும் போதே குறிப்பெடுத்து அந்தந்த நடிகர்கள் புகைப்படங்களை கூகுளில் தேடியிருக்கிறார். 

' அவர்களுடைய புகைப்படங்களை சினிமா எனும் பூதத்தில் நீங்கள் இடம் பெறச்செய்திருக்கலாமே'என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். 

ராஜநாயஹத்தின் சினிமா எனும் பூதம்
 படித்ததன் மூலம் 
சில படங்களை பார்க்க வேண்டும் என்று குறித்து வைத்திருப்பதாக சொன்னார். 

உதயநிதி ஸ்டாலின் நடிப்பு எனக்கு பிடிக்கும் என்பதை 2015 ஆம் ஆண்டிலேயே 
என் பதிவொன்றில் எழுதியவன் நான். 
இப்போது கூட மிஸ்கின் 'சைக்கோ' வில் உதயநிதியின் பெர்ஃபெக்ட் பெர்ஃபாமன்ஸ் பற்றி எழுதியிருந்தேன். 

டெலிபதி மாதிரியிருக்கிறது. 



ராஜநாயஹத்தின் மற்ற புத்தகங்கள் படிக்க கிடைக்குமா? உதயநிதியின் ஆவல். 




' அண்ணே, அண்ணே' என்று இயல்பாக பேசிய உதயநிதி அன்புக்கு நெகிழ்கிறேன். 

கரு. பழனியப்பன் என்ற அபூர்வ மனிதருக்கு எங்கனம் சம்பிரதாயமாக நன்றி சொல்ல முடியும்? 

 அன்பும் அனுசரனையும் 
கொட்டி கிடக்கிறது. 

"மனிதனின் கைக்கு எட்டும் படி 'தற்செயல்' என்கிற ஒரு விசேஷமான சிலு சிலு ஓடை

கைகளை அந்த ஓடைக்குள் செலுத்தினால்
 இரு கைகளிலும் அதிசய அற்புதங்கள் சிக்கும் "

- ரே பிராட்பரி

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.