Share

Feb 18, 2020

1982ம் வருஷத்தில் வாங்கிய புத்தகத்தின் பில்

புத்தகங்களை அடுக்கி ஒழுங்கு செய்து கொண்டிருந்த போது தி. ஜானகிராமன்
 குறு நாவல் தொகுப்பில் இருந்து இந்த பில் விழுந்தது.

சிவஞானம், நாலாவது சார்
 என இரு குறுநாவல்கள் இந்த நூலில்.


  1982ல ஆகஸ்ட் 3ம் தேதி இந்த நூலை வாங்கியிருந்திருக்கிறேன்.

விலை நான்கு ரூபாய் இருபத்தைந்து காசு.

நான் மதுரை மீனாட்சி புத்தக நிலையத்திற்கு ரெகுலர் கஸ்டமர் என்பதால் டிஸ்கவுண்ட் இருபத்தைந்து காசு.
நான்கு ரூபாய்க்கு இதை வாங்கியிருக்கிறேன்.

எவ்வளவு பொருள், சொத்து, நகையெல்லாம் தொலைந்து போய் விட்டது.
இந்த பில் பிடிவாதமாக என்னுடன் இருக்கிறது.

புத்தகம் தொலைவதை விட புத்தகம் வாங்கிய பில் தொலைவதற்கு வாய்ப்பு அதிகம்.

அப்போது 1982ல் நான் படித்தவுடன் என்னிடம் இருந்து இதை பெற்று
சரவணன் மாணிக்கவாசகம் படித்த பின் அவருடைய தாயாரும் இதை படித்திருக்கிறார்.
சரவணனுடைய அம்மா தலை சிறந்த வாசகி.

 ஒரு நூலை வாங்கினால் நான் படிப்பதோடு அன்று சரவணனும், சரவணன் அம்மாவும் படித்து விடுவார்கள்.

அதன் பின் வெவ்வேறு காலங்களில் மீண்டும், மீண்டும் நான் மறு வாசிப்பு செய்து கொண்டே இருந்திருக்கிறேன்.

அவ்வளவிற்கும் சிரத்தையோடு இந்த பில் புத்தகத்தில் இருந்து கீழே விழுந்து காணாமல் போகாமல்..


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.