Share

Feb 22, 2020

மோக முள் பில் புத்தகத்தில்

தி. ஜானகிராமன் 'மோக முள்',
 லா. ச. ரா ' அபிதா
மதுரை மீனாட்சி புத்தக நிலையத்தில்
 1982ல் வாங்கிய பில்.



மோக முள் நாற்பது ரூபாய்.

1989ல் புதுவை பல்கலை கழகத்தில் தி.ஜானகிராமன் கருத்தரங்கம் நடைபெற்ற போது என்னிடம் இருந்த ஜானகிராமன் நூல்களையும் பெற்று காட்சிக்கு வைத்திருந்தார்கள்.
அப்படியும் மோக முள் பில்  தொலைந்து போய் விடாமல் இருந்திருக்கிறது.
வாழ்க்கை ஸ்தம்பித்த போதெல்லாம் மோக முள்ளைத் தான் மீண்டும் மீண்டும் கணக்கற்ற தடவை எடுத்து படித்திருக்கிறேன். இன்றும் அழுத்தமாக இந்த பில் புத்தகத்திலேயே இருக்கிறது.

 மதுரை சென்ட்ரல் தியேட்டர் தாண்டி அப்போது மீனாட்சி புத்தக நிலையம்.

எல்லா பதிப்பக வெளியீடுகளும் கிடைக்கும்.

புத்தக நிலைய அதிபர் செல்லப்பன் மறக்க முடியாத நபர்.

ஒரு சமயம் புத்தகங்கள் சில வாங்கி பில் போட்டு பணம் கொடுத்த பின்
உ.வே.சுவாமிநாதய்யரின் ' என் சரித்திரம்' பார்த்து விட்டு நான் 'அட, சரி இதற்கு இப்ப கையில காசு இல்ல. அடுத்த முறை வாங்கிக் கொள்கிறேன்'
என்று சொன்ன போது
 செல்லப்பன் 'பரவாயில்லை. உ. வே. சாவையும் எடுத்துக் கொள்ளுங்கள். பணம் மெதுவாக கொடுங்கள்.'

சாதாரணமாக புத்தகம் கடனுக்கு தருபவரல்ல.

இங்கே  புத்தகம் வாங்க  என்னைப் போல அடிக்கடி வந்த இன்னொரு கஸ்டமர் பழ. கருப்பையா.
ஏதோ ஒரு புத்தகம் பற்றி என்னிடம் 'வாங்கலாமா?'
என்று அபிப்ராயம் கேட்டார் என்பது நினைவிருக்கிறது. நான் ஏற்கனவே படித்திருந்த அந்த புத்தகத்தின் முக்கியத்துவம் பற்றி சொன்னேன். உடனே அதற்கும் பில் போட சொல்லி வாங்கிக் கொண்டார்.

எனக்கு அவருடன் அறிமுகமெல்லாம் கிடையாது.
செல்லப்பனிடம் கேட்டார் பழ. கருப்பையா 'யார் இந்த பையன்? '

சரவணன் மாணிக்கவாசகம் அன்றைய என்னுடைய அத்தனை நூல்களையும் படித்ததற்கு கைமாறு போல,
இப்போது எவ்வளவோ நூல்கள் வாங்கி அன்பளிப்பாகவே கொடுத்திருக்கிறார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.