Share

Oct 30, 2022

சொல் ஏர் உழவர் பகை


எழுத்தாளரோட மகன் ஒர்த்தன் 
"எங்கப்பாவ படிக்கிற. 
அவரப்பத்தி எவ்வளவோ எழுதுற. 
நான் எழுதுனத ஏன்டா படிச்சு என்னய பத்தி எழுத மாட்டேன்ற? "ன்னு
 என் கிட்ட கடும் பகையாயிட்டான்.

நடிகையர் திலகம் சாவித்திரி பற்றி
 நான் குமுதத்தில் எழுதியதை படித்து விட்டு, 
"என்னய பத்தி எழுதுங்க "ன்னு அனத்துன 
ஒரு ரொம்ப வயசான 
பிரபல 'எழுத்து பிராணி' கூட உண்டு.

புலி வால்

ஃபேஸ்புக் ஃப்ரண்ட்ஸ் லிஸ்ட் ஐயாயிரம் தாண்டி இன்று இரண்டு வருடமாகிறது. (ஜூன் 2019). 

யோசிக்காம  கையில் அகப்பட்டவர்களை அன்ஃப்ரண்ட் செய்து கொண்டு இருக்கும் போதே தினமும் புது ஃப்ரண்ட் ரிக்வஸட் வந்து கொண்டே தான் இருக்கிறது. 
களையெடுக்கும் போது பயிரும் அடி வாங்குவது நடக்காமலிருக்குமா? 

ஐயாயிரம் மீ்ண்டும் மீண்டும் நிரம்பி வழிகிறது. 

போன வாரம் அன்ஃப்ரண்ட் செய்யும் போது  Stress. 

ஐயாயிரம் ஃப்ரண்ட்ஸ் ல நாலாயிரத்து தொள்ளாயிரம் பேர் யாரென்றே தெரியாது. இவர்களில் பெரும் பகுதி dead account என்பதும் தெரிந்தது தானே. 

கணக்கிலடங்காத முகவர்களை block செய்தாகி விட்டது. 

மீண்டும் மீண்டும் ஐயாயிரம் லிஸ்டில் வந்து விடுகிறது.

 ஃப்ரண்ட் லிஸ்ட்டில் இல்லாதவர்கள் பலர் 
என்னை வாசிக்கிறார்கள். சிலர் கமெண்ட் போடவும் செய்கிறார்கள். 

ஃப்ரண்ட் லிஸ்டில் இருப்பவர்களிலும்
 லைக் கொடுக்காமல்,
 கமெண்ட் போடாமல் 
வாசிக்கிறவர்கள் இருக்கிறார்கள். 
படிக்காமலே லைக் கொடுக்கிறவர்கள் கூட. 

 ஃபேஸ்புக்கில் என்னை மட்டுமே படிக்கும்
 சிலர் உண்டு.  ஒவ்வொரு பதிவு பற்றியும் சொல்வார்கள். லைக் கொடுப்பதில்லை. 
ஏன் லைக் கொடுக்கவில்லை, கமெண்ட் போடுவதில்லை என்று நான் கேட்டதேயில்லை.
என்னுடைய மிகச்சிறந்த வாசகர்கள் சிலர் கமெண்ட், லைக் ஒரு தடவை கூட போட்டதேயில்லை தெரியுமா? 
என் ஃப்ரண்ட் லிஸ்டிலும் அவர்கள் கிடையாது. 
 சிலர் இங்கே படித்து விட்டு வாட்ஸ் அப்பில் கமெண்ட் போடுவார்கள். 
பதிவு போட்ட அந்த சில நிமிடங்களில் படிப்பவர்களை அறிவேன்.

பதிவுகளுக்கு லைக் கொடுக்காமல்
 ஃபேஸ்புக் ஸ்டோரியில் புகைப்படங்களுக்கு லைக் கொடுப்பார்கள். ஸ்டோரியில் லைக் கொடுத்தால் மற்றவர்களுக்கு தெரியாது என்பதால். 

எனக்கு லைக், கமெண்ட் தேவையில்லை என்று   இரண்டு ஸ்டேட்டஸாக 
கடந்த ஐந்து வருடங்களில் போட்டிருக்கிறேன். 

 Blog 24 மணி நேரம் வாசிக்கப்படுகிறது.
 ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில். 

ஃபேஸ்புக்கில் இல்லாதவர்கள் ப்ளாக்கில் தான் படிக்கிறார்கள். யாரும் அதுல பின்னூட்டம் செய்ய முடியாது. 

ட்விட்டரில் படிக்கிறார்கள்.

Copy Cats தொந்தரவு. 
எவ்வளவு பதிவுகள் திருடப்பட்டது?
யூட்யுப் உள்பட தொடரும் களவுகள்.
ராஜநாயஹத்திற்கு தான் இப்படி  நடக்கிறது என்கிறார்கள்.

ஃபேஸ்புக் என்பதே 

புலி வால புடிச்ச கத.

தினமும் என் மொபைல் நம்பர் ஃபேஸ்புக் மெஸஞ்சர் பாக்ஸில் கேட்கிறார்கள். 
ஃபேஸ்புக் மெஸஞ்சர் மூலமாக கால் போட முயற்சிக்கிறார்கள். 

"ஒங்கள நேர்ல சந்திக்கனும் ராஜநாயஹம் சார்"

போன் போட்டவர்கள் ரெண்டு மணி நேரம் 
பேசி விட்டு 'சாரி சார், போன்ல சார்ஜ் போயிடுச்சி' 

தன் வலைத்தளத்தை படிக்க வேண்டும் என்று நூற்றுக்கணக்கில் கேட்கிறார்கள். 

எழுதிய பதிவு, கதை லிங்க் அனுப்பி
'படிங்க..அதோட கட்டாயம் உங்க அபிப்பிராயம் உடனே, உடனே சொல்லனுங்க'ன்னு எனக்கு மிரட்டல்.

வீடீயோ அனுப்பி, அதை பார்க்கச் சொல்கிறார்கள். அபிப்ராயம் சொல்லவில்லை என்று சடைக்கிறார்கள். 

எழுத்தாளர்கள், கவிஞர்கள் தங்கள் புத்தகங்கள் 
அனுப்ப வேண்டி, விலாசம் கேட்கிறார்கள். 

'ராஜநாயஹம் நீங்க நல்லா எழுதுறீங்க. 
உங்க விலாசம் கொடுங்க. என்னோட அஞ்சு புத்தகங்கள அனுப்புறேன்.. '

புத்தகங்கள் அனுப்பியவர்கள் 'இன்னேரம் நொறுங்கியிருக்கணுமே' என்று 'ஏன் இன்னும் விமர்சனம் செய்யவில்லை' என்ற எரிச்சலில். 

ஏதோ, நான் கடன் வாங்கி விட்டாற் போல. 

புத்தகம் எதுவும் அனுப்பாட்டியும் ,  
இவனா தானாவே நம்மள படிச்சி எழுத மாட்டேன்றானேன்னு எரிச்சல்ல இருக்கிறவர்களும்  உண்டு.

ரொம்ப பெரிய எழுத்தாளர் மகன் ஒர்த்தன் 
 தான் எழுதியுள்ள  புத்தகங்கள
 ராஜநாயஹம் படிக்கலன்னு 
கடும் பகையாயிட்டான். 
ரொம்ப பெரிய எழுத்தாளர படிச்சதுக்கு இப்படியெல்லாம் தண்டனை. 
"எங்கப்பாவ படிச்ச. ஏன்டா நான் எழுதுனத படிக்க மாட்டேன்ற. என்னய பத்தி எழுத மாட்டேன்ற.. அயோக்யா. ஒன் கூட 'டூ'. போடா"ன்னுட்டான். 

அன்னாடம் புளுபுளுன்னு எழுத்தப்புழுத்தி, கவிதய புழுத்தி
அனுப்பி, அனுப்பி.. 
"படிங்க, படிச்சிட்டு இதைப்பத்தி எழுதுங்க"ன்னு
தொடர் தொந்தரவுகள்.

ஆடு புழுக்க போடுறது போல மொத்த மொத்தமா போடுறீங்க, போட்டுக்கங்க.. 
என்ன ஏன் அத மோந்து பாக்க சொல்றீங்க.

Internet magazines : 'எங்களுக்கு ஒரு ஆர்ட்டிக்கிள் எழுதியனுப்பவும். நீங்கள் புதிதாக எழுதியதாக இருக்க வேண்டும்.' 

"எங்க நாடகத்த பார்க்க வாங்களேன். ரொம்ப வித்தியாசமான நாடகமாக்கும்.. பாத்துட்டு அதப்பத்தி நல்லா எழுதுங்களேன்"

தங்களின் எதிர்பார்ப்பை நான் ஈடேற்றாததால் 
வருத்தத்திலும் கோபத்திலும் வேறுவிதமாக வினையாற்றுகிறார்கள். 
எதிரிகளாகிறார்கள். 

'ராஜநாயஹம் தலக்கனம் பிடிச்ச ஆளு.' 

என் போராட்டமான வாழ்க்கை முறை, 
மற்றவர்கள் எதிர் பார்ப்புக்கு 
ஈடு கொடுக்கும் 
நிலையிலெல்லாம் இல்லை. 

யதார்த்தவாதி வெகுஜன விரோதி.

(சென்னை வந்து ஆறு வருடங்கள் ஒன்பது மாதங்கள் ஆகிறது.  ஆறாவது வீடு 
மாறி விட்டேன்.
(13.09.2015  - 03.06.2022)

இப்போது 
அப்பார்ட்மெண்ட்
 பதினான்காவது மாடியில் ஃப்ளாட். எப்போதும் போல வாடகை வீடு தான்.
இல்லாதவனுக்கு பல வீடு..

2020ல் கண்ணில் லேசர் ட்ரீட்மெண்ட்.
இந்த வருடம் 2022 ஜனவரி மாதம் கொரானா.
மார்ச் மாதம் உடலில் இரண்டு சர்ஜரி.  சொல்லொண்ணா துயர அனுபவம்.

சர்ஜரி முடிந்த பிறகும் தொடர்ந்து அவஸ்தை - வயிற்றுக்குள்ளிருந்து ஒரு ட்யூப் இடுப்பு வழியே உடலுக்கு வெளி வந்து ஒரு கலெக்ஷன் பேக். நான்கு வாரம் தொங்கிய கலெக்சன் பேக் - பித்தநீர்த்துளிகள், ரத்தத்துளிகள் வெளியேற்றத்திற்காக)

இவர்கள் யாரையுமே' என்னை படியுங்கள் ' என்று நான் கேட்டதேயில்லை. 

எல்லோருமே என்னை படித்தவர்கள். 
பரஸ்பரம் வேண்டுகிறார்கள்.

ம்ஹூம். மாட்டேன், போ. 

..

https://m.facebook.com/story.php?story_fbid=3127787564101355&id=100006104256328

https://www.facebook.com/100006104256328/posts/2238469029699884/

https://m.facebook.com/story.php?story_fbid=3085598808320231&id=100006104256328

https://m.facebook.com/story.php?story_fbid=3337229939823782&id=100006104256328

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.