Share

Oct 16, 2021

My cousin Aro in Australia Melbourne


 My cousin 'Aro' in Australia Melbourne 


பெரியப்பா மகன். 

35 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில். 

அவருடைய மனைவி ஆஸ்திரேலிய 

வெள்ளைப் பெண்மணி. 

ஆரோவின் ஒரு அருமையான மகன். 


ஆரோ என் ஒன்று விட்ட சகோதரன் என்பதை விட  சிறந்த நண்பன். 

எங்கள் இளமைக்கால நினைவுகள் 

மிக அழகானவை. 

திருச்சி பிரபல கிரிமினல் லாயர் பால்ராஜ் அவர்களின் உடன் பிறந்த சகோதரன் தான் ஆரோ.                    எங்கள் அண்ணா பாலு 

என் முதல் ரசிகன் ஆரோ தான். 

ரசித்து ரசித்து, 

இன்றும் பழைய ராஜநாயஹம் கதைகளை 

ஆரோ செல் பேசும் நேர்த்தி பற்றி 

சொல்லில் அடக்க முடியாது. 


கடந்த முப்பத்தி ஐந்து ஆண்டுகளில் ஒரே முறை தான் பார்க்க எனக்கு வாய்த்தது. 

பெரியப்பா இறந்த போது 

ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த ஆரோவை 

2014ல் தான் ஒரு முறை பார்த்தேன். 


"கண்ணின் மணி போல

மணியின் நிழல் போல 

கலந்து பிறந்தோமடா 

இந்த மண்ணும் கடல் வானும்

 மறைந்து முடிந்தாலும் 

மறக்க முடியாதடா, 

உறவைப் பிரிக்க முடியாதடா."


இந்த வரிகளை கேட்கும் போதெல்லாம்,

நான் வாய் விட்டுப் பாடும் போதெல்லாம் 

எனக்கு ஆரோ நினைவெல்லாம் கூட வரும்.


https://www.facebook.com/100006104256328/posts/3088026201410825/


https://m.facebook.com/story.php?story_fbid=2494032960810155&id=100006104256328


https://www.facebook.com/100006104256328/posts/2775854145961367/


https://www.facebook.com/100006104256328/posts/2783468831866565/


https://rprajanayahem.blogspot.com/2017/04/blog-post_27.html?fbclid=IwAR015HQV0Bhm5zr5hjOEqj9WvMkzWVehLo3wseTfZeH302br6YmATeSO5jU&m=1

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.