Share

Oct 17, 2021

யார் தான் குழந்தை?



ஜெயகாந்தனும் கண்ணதாசனும் இணைந்து பல அரசியல் கூட்டங்களில் கலந்து கொண்ட துண்டு. ஆட்சி கட்டிலில் ஏறியிருந்த தி. மு. க வை இருவரும் காரசாரமாக எதிர்த்தனர். அப்போதெல்லாம் தி. மு. க தொண்டர்களுக்கு ஜெயகாந்தன், கண்ணதாசன் பெயரைச் சொன்னாலே முகம் சுளித்து, எரிச்சல் படுவார்கள். 'குடிகாரப்பயலுக காந்தி கட்சில' என ஏளனம் பேசுவார்கள். இருவரின் வெளிப்படைத் தன்மை தான் இப்படி கிண்டல் செய்ய வழி வகுத்தது. 


ஜெயகாந்தன் நிகழ்ச்சிகளுக்காக செல்லும் போதெல்லாம் கண்ணதாசனுடன் அவருடைய பிள்ளைகளும் வருவார்களாம். 

அந்த பிள்ளைகள் ஜெயகாந்தனுக்கு மிகவும் உவப்பானவர்களாகவே இருந்திருக்கிறார்கள். 


கண்ணதாசன் பேசி உரையாடும் போது 'ஜெயா' என்று ஜெயகாந்தனை அழைப்பாராம். 


காமராஜரின் செல்லப்பிள்ளைகளாகவே இருந்தவர்கள். 


காங்கிரஸ் கட்சி 1969ல் உடைந்தது. அப்போது கண்ணதாசன் அடிக்கடி மாறிய விஷயம் காமராஜருக்கு  செய்த துரோகம் தான். காலா காந்தி புண் பட்டுப் போயிருப்பார். 


ஜெயகாந்தன் இந்த துரோகத்தை வெறுத்தார்.


இந்த அரசியல் நிகழ்வு பற்றி ஜெயகாந்தன் 'இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்' தொகுப்பிலேயே வேதனையுடன் குறிப்பிட்டார். 


" கண்ணதாசனை நான் ஒரு குழந்தை என்று நினைத்தேன். ஆனால் அவரோ என்னைத் தன்னை விடவும் ஒரு குழந்தை என்று கருதினார். எனவே, அவர் குழந்தை அல்ல என்று நான் கண்டு கொண்டேன். 


கார்ல் மார்க்ஸ், சே குவேரா வரை கவியுள்ளமும் கவிதை சஞ்சாரமும் கொண்டு மொழிக்காதலர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். 

ஆனால் கண்ணதாசன்? 

போக ப்ரியர், நிலையான புத்தியில்லாதவர்"


‘அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி, என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி’ என்று காமராஜரிடம் சரணாகதி அடைந்தவர் இரண்டு வருடங்களுக்குப் பின், காமராஜருக்கு இக்கட்டான சூழ்நிலையில் ஆதரவாக நில்லாமல் கண்ணதாசன் இந்திரா காங்கிரஸில் இணைந்ததெல்லாம் 

ஜெயகாந்தனை எப்படி வருத்தப்படாமல் இருக்கச் செய்யும்? 


ஜெயகாந்தன் காங்கிரஸ் உடைந்த போது கண்ணதாசனின் நடவடிக்கைகள் குறித்து அதிருப்தியில் சொன்ன வார்த்தைகள்  சரியானவை தான்.  காமராஜருக்கு துரோகம் செய்த கண்ண தாசன் முன்னதாக 1967ல் ‘அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி , என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி “ என்று பாட்டெழுதி விட்டு , காமராஜருக்கு கை கொடுக்க வேண்டிய தருணத்தில் அபத்தமாக இந்திரா காங்கிரஸிற்கு  

 போனதெல்லாம் அவருடைய நிலையில்லாத குணத்தையே காட்டிய விஷயம்.  அந்த சமயத்தில் ஜெயகாந்தனின் தார்மீக கோபம் சரியானது தான்.


உடன்பாட்டு பதில்களும் எதிர் மறை கருத்துக்களும் எல்லா நிலைப்பாடுகளுக்கும் எப்போதுமே உண்டு. 

ஒரே சீரான தன்மை என்பது மட்டரகமானது 

Consistency is the hall mark of mediocrity.

எதையுமே, யாரையுமே generalize செய்வதும் சரியாகாது தான்.

...... 


http://rprajanayahem.blogspot.com/2012/07/blog-post_12.html?m=0


http://rprajanayahem.blogspot.com/2012/04/blog-post.html?m=0


http://rprajanayahem.blogspot.com/2008/09/blog-post_14.html?m=1


http://rprajanayahem.blogspot.com/2008/09/bell-jar.html?m=0


http://rprajanayahem.blogspot.com/2009/01/blog-post_26.html


http://rprajanayahem.blogspot.com/2014/12/blog-post_29.html?m=0


http://rprajanayahem.blogspot.com/2015/04/cock-snook-at-mother.html?m=0


புகைப்படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் ,  இயக்குனர் சி. வி. ராஜேந்திரன், கண்ணதாசன், ஜெயகாந்தன், எம். எஸ். வி

(நன்றி : The Hindu)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.