Share

Oct 12, 2021

'மீரா' படமும் பாரத ரத்னா விருதும்

 மீரா படமும் பாரத ரத்னா விருதும்

- R.P. ராஜநாயஹம்


கவிக்குயில் சரோஜினி நாயுடு அவர்கள் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி நடித்த "மீரா" படத்தின் ப்ரிவியூ பார்த்து விட்டு

 வெளியே வரும்போது,

சர் டி.விஜயராகவாச்சாரியார் கேட்டார் : 

“ Now do you surrender the title

 ‘the nightingale of India’?”

சரோஜினி நாயுடு பதில் :“I have already done it.”


"மீரா " படம் பற்றி

இந்த படத்தில் எம் எஸ் சுப்புலக்ஷ்மி தவிர இன்னொரு பாரத ரத்னா

சின்ன எக்ஸ்ட்ரா ரோலில் நடித்திருக்கிறார்.

 டி.எஸ்.பாலையாவின் உதவியாளராக 

தாடி வைத்த இளைஞர் ஒருவர் வருவார்.

 அவர் தான் இன்னொரு பாரத ரத்னா. 

எம் ஜி யார். 


பாரத ரத்னா அவார்ட் பற்றி


எம்ஜியாருக்கு பாரத ரத்னா விருது கொடுத்த பின், இரண்டு வருடம் கழித்துத் தான்

 ஒரு மகத்தான மனிதருக்கு 

பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்டது. 

பி.ஆர்.அம்பேத்கர். 


எம்ஜியாருக்கு பாரத ரத்னா விருது 

கொடுத்த பின்னால், 

மூன்று வருடம் கழித்துத் தான்

இன்னொருவருக்கு பாரத ரத்னா விருது கிடைத்தது.

யார் தெரியுமா?


இந்தியாவின் இரும்பு மனிதர் 

சர்தார் வல்லபாய் பட்டேல். 


.........................


மீள்  2008

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.