Share

Apr 2, 2021

'அரசியல் பிழைத்தோர்' நூல் - பா. அசோக்

 ஞானதகப்பன் என நான் கருதும் திரு.R.P.ராஜநாயஹம் அவர்களின் நூல் இது.. 


பல்துறை அறிஞர் அவர்..


அரசியல், இலக்கியம் ,ஓவியம் இசை,சினிமா, நகைச்சுவை என அவர் தொடாத துறைகள் இல்லை...

 

Master of all trades , Jack of none..


நுண்மாண் நுழைபுலம் என்ற சொல்லின் நடமாடும் உருவம் Rajanayahem R.p. ..


Blessing in disguise என விளம்பப்படும் கலைஞருக்கு சமர்ப்பணமான இந்நூலில் கலைஞரின் பேச்சொன்று, 


" அலகாபாத் நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி, சொந்த கையால் தீர்ப்பு எழுதக்கூடியவர் " ... 


இப்போதும் தேர்தல் களம் கலைஞரை மிஸ் செய்கிறதல்லவா..?


காமராசரின் தாய் கருவாடு விற்றது பற்றி பேசிய கலைஞருக்கு கண்ணதாசன் தந்த எதிர்வினை...


ஒன்றுக்கு மேலிருந்த மதுபெர்மிட்டை சரண்டர் செய்ய கண்ணதாசனை கேட்டபோது, ஒரு காதலிக்குமேல் வைத்திருப்பவர்கள் சரண்டர் செய்வார்களா என அன்றைய முதல்வரை வினவியது...


கணக்கு கேட்டவருக்கு பேராசிரியரின்  பதில்...


மு.க. அழகிரியின் வெள்ளந்தித்தனம்..


வலம்புரி ஜான், நெடுஞ்செழியன், டி.வி.நாராயணசாமி, ஜேப்பியார், வெற்றிகொண்டான், தீப்பொறி ஆறுமுகம்,  கா.காளிமுத்து, என 60 களின் அரசியலில் ஆரம்பித்து மோடி வரை இதில் காணலாம்...


நூலாசிரியரின் மாமனாருக்கும் 

சீமான் மாமனாருக்குமான உறவு ,

கொடுக்கல் வாங்கல் பற்றி தம்பிகள் படித்தறிதல் நலம்..


அரசியல் நாகரீகம் பற்றி

ஆளாளுக்கு வகுப்பு எடுத்துக்கொண்டிருக்கும் காலத்தில், அரசியலுக்கும் நாகரீகத்துக்கும் பன்னெடுங்காலமாய் தொடர்புண்டா என நம்மை கேட்க செய்யும் நூலே இது.


அவசியம் வாசியுங்கள் 


A Political Nostalgia...


... 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.