Share

May 22, 2020

ஏலி, ஏலி, லேமா சபக்தானி



முந்தைய நாள் மயங்கி விழுந்தவர் காருக்குறிச்சி அருணாச்சலம் மருத்துவ மனையில் அடுத்த நாள் கண் விழித்த போது ஆறாத்துயருடன் வாய் திறந்து சொன்ன வார்த்தைகள்
'எனக்கு இப்படி ஆயிடுச்சே,
நான் புள்ளக்குட்டிக்காரன் '
இது தான் கடைசி வார்த்தை.  கோமாவுக்கு போய் விட்டார். மறு நாள் மறைந்தார்.

க.நா.சு இறந்த பின் அவருடைய மனைவியார் டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய போது        முன்றில் மா. அரங்கநாதனும், சா.கந்தசாமியும் மயிலாப்பூர் சென்று துக்கம் விசாரித்தார்கள்.
"நான் தூங்கிவிடக்கூடாது - தூங்கினால் போய் விடுவேன் " என்றும் தன் அம்மாவின் உருவம் தெரிகிறது என்றும் க. நா. சு கடைசியாகக் கூறினாராம்.

கே.பாலசந்தர் மரணப்படுக்கையில் இருக்கும்போது
தன்னிடம்  சொன்னதாக வசந்த் சொன்னது -
“ வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமும் இல்லை என்பது இப்பத்தான்டா புரியுது..”

பாலு மகேந்திரா இறப்பதற்கு கொஞ்ச நேரம் முன்
பாலாவிடம் சொன்னாராம்: “என் கண்ணை கவனிக்கச் சொல்லி டாக்டரிடம் சொல். என் கண்ணில் தான் அடிபட்டிருக்கிறது. கண் தான் எனக்கு முக்கியம்...”

......

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.