Share

Jul 25, 2019

காட்சி துகள் – பழைய சில



- டி.பி.முத்துலட்சுமி “ மாப்பிள்ளை பாடிக்கிட்டே அழுகுறாரு.”

வி.கே.ராமசாமி “பாடிக்கிட்டே அழுவுறவன இப்பத்தான் பாக்குறேன்.”


- மனோரமாவின் ’கெக்ககெக்கக்கே’ கொணட்டல் சிரிப்புக்கு
கேமராவை பார்த்து நாகேஷ் ரீயாக்‌ஷன்
“பரவாயில்ல பொம்பள மாதிரியே சிரிக்கிறா”


- சூரக்கோட்டை ஜமின்தார் என்ற நாகேஷின் புளுகு வெளுத்துப்போன பின் ரமாப்ரபா சங்கு சக்கர சாமி திங்கு திங்குன்னு ஆடுன கதையா கொந்தளித்து பின் சலித்துப்போய் வெறுப்புடன் நாகேஷை பார்த்து 
“முகத்த பாரு, ராஜ களை” என்று முகம் சுளிக்கும் போது நாகேஷ் தன் முகத்தை கேமராவுக்கு  திருப்பி காட்டுவார். 


- ஐயா தெரியாதய்யா ராமாராவ் ஒரு தேனிக்கூட்டின் மீது கல் போடுவார். ஏ.கருணாநிதியை தேனிக்கள் கொட்டும்.
ஏ. கருணாநிதி தவித்துப்போய் புலம்புவது “ இது தேனி இல்ல. தேளுக்கு ரெக்க மொளச்ச மாதிரி இருக்கு”


- ‘காதல் என்பது எதுவரை’ பாட்டில் ஜெமினி ரெண்டு யானைகள் மீது மாறி மாறி அனாயசமாக தாவி உட்கார்வார். சாம்பார்னு பேர் வாங்கின ஜெமினி கணேசன்.


- ’உடம்பு இப்ப எப்படி இருக்கு’ என்ற கேள்விக்கு எம்.ஆர்.ராதா உடன் கையால் தன் தொடையில் தட்டி சொறிந்து கொண்டே
அடித்தொண்டை கட்டை குரலில் அழுத்தமாக
“ தேறிக்கொண்டே வருகிறது”









No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.