Share

Jul 10, 2019

No Resemblance without Strangeness


மேட்டூர் அருகே நெரிஞ்சிப்பேட்டையில் ஒரு ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த போது
மனோரமா ஒரு நடிகனை பார்த்து “இவன பாத்தா எனக்கு யாரோ ஒருத்தர் ஞாபகம் வர்றாரு. இவன் சாயல் எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் ஞாபகம் வருது” என்று சொன்னார்.
நான் மட்டுமே இதை ஆர்வமாக கவனித்தேன்.

மறு நாள் காலையிலும் ஷூட்டிங் ஆரம்பிக்கும்போதே மனோரமா மீண்டும் சொன்னார் ”யாரோ ஒர்த்தர் இவன மாதிரியிருப்பாரே..ன்னு தோணுது”
நான் மனோரமாவிடம் “ யாருன்னு ஞாபகம் வரலியாம்மா?”
மனோரமா “ சொல்றேன். எப்படியும் ஞாபகம் வந்துடும்”
என்னுடைய இயல்பான ஆர்வம். மறு நாள் நானே கேட்டேன்.
சாயல் என்பதே ஒவ்வொருவர் கண்ணுக்கு ஒவ்வொரு விதமாக தோற்றம் கொள்ளும். இன்னொருவர் பொதுவாக அதை “சே..சே.. அவருக்கும் இவனுக்கும் என்ன சம்பந்தம்” என்று கேட்கும்படியாக இருக்கும்.
அடுத்த நாள் நான் “கண்டுபிடிச்சிட்டீங்களா?”
மனோரமா “ அவர் ஒரு நடிகர் தான்..எப்படியும் சொல்லிடுறேன்”

கொஞ்ச நேரத்தில் என்னிடம் மனோரமா “ ஞாபகம் வந்துடுச்சி..சுப்பையா அண்ணன்! சுப்பையா அண்ணன் சாயல் இவன் கிட்ட இருக்கு”

எஸ்.வி.சுப்பையாவை குறிப்பிடுகிறார்.
Strange!

எஸ்.வி.சுப்பையா எப்பேர்ப்பட்ட நடிகர். (அப்போது அவர் இறந்து  12 வருடங்கள் ஆகியிருந்தது.)
அவர் சாயல் இந்த நடிகனிடம் மனோரமாவுக்கு தெரிந்திருக்கிறது.

இவனுக்கு  சுட்டுப்போட்டாலும் நடிப்பே வராது.

கேமராமேன் எம்.சி. சேகர் ( இயக்குனர் P.வாசுவின் சித்தப்பா) ரொம்ப மூட் அவுட் ஆகிக்கொண்டிருந்தார். ’இவன் நடிக்கிற ஷாட் ஓகே ஆக ரொம்ப டேக் ஆகி விடுவதால் களைப்பு அதிகமாகிறது. ஃபில்ம் ஏராளமா வேஸ்ட் ஆகிறது.”
இந்த நடிகனை  இப்போது நான் வீட்டில்  சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது
ஒரு நாள் டி.வியில் ஓடிய சீரியல் ஒன்றில் மீண்டும் பார்த்தேன்.





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.