Share

Jul 16, 2019

படியாது


என்னுடைய பழைய சகா ஒருவரின் மாமனார் பற்றி இவருக்கு ரொம்ப ரொம்ப ஆவலாதி. உறவினர்களிடமெல்லாம், சினேகிதர்களிடமும் கூட எப்பவும் திட்டிக்கொண்டே இருந்து கொண்டிருந்தார்.

மாமனார் பக்கா பிசினஸ் மேன்.  பணம் சம்பாதிக்கிற புத்திசாலித்தனம் நிறைந்தவர். அதனால Shylock வகையறா தான்.

மருமகன் நல்ல பணக்காரர். அப்பா சொத்தின் செல்வாக்கில் சொகுசாக வாழ்ந்து கொண்டிருந்தார்.
மாமனாரிடம் கொஞ்சங்கூட பண்போ, நாகரீகமோ, நடவடிக்கைகளில் மேன்மை, இயல்பில் சிறப்பு எதையுமே இவரால் காண முடியாமல் போயிற்று.
சொந்த ஊருக்கு போய் இருந்த போது மாமனாரின் அப்பாவை சந்தித்திருக்கிறார்.
மாமனாரின் அப்பா தொன்னூறு வயதெல்லாம் தாண்டியவர். நிறைய பிள்ளைகள். நிறை வாழ்வு வாழ்ந்து விட்ட முதியவர்.
சகாவின் மாமனார் தான் அவருக்கு மூத்தமகன்.
முதியவரிடம் அவர் மகன் பற்றி தன் மனக்குறைகளை மொத்தமாக கொட்டியிருக்கிறார். குமுறி தீர்த்திருக்கிறார்.

எல்லாவற்றையும் காது கொடுத்து கேட்டு விட்டு பெரியவர் கேட்டிருக்கிறார்.
”நீங்க கல்விக்காக எத்தன வருஷம் செலவழிச்சிருக்கீங்க?”
சகா காலத்தில் எல்.கே.ஜி., யு.கே.ஜி கிடையாது. ஒன்னாப்புல இருந்து தான் கல்வி.
கணக்கு போட்டு பார்த்து விட்டு சொல்லியிருக்கிறார்
“ பதினஞ்சு வருஷமுங்க.”
முதியவர் “ என் மகன் கல்விக்காக மூணு வருஷம் தாங்க செலவழிச்சான். அவன் அவ்வளவு தாங்க”

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.