Share

Jun 24, 2019

Pethidine Injection




இன்றைக்கு தூத்துக்குடிக்காரர்கள் யாரோடு பேசினாலும் உடன் அவர்கள் மிகுந்த பரவசத்துடன் “சந்திரபாபு எங்க ஊர்க்காரர்” என்று ஒரு வார்த்தை சொல்லாமல் போவதேயில்லை.
சந்திரபாபு பெத்தடின் இஞ்சக்ஸன் போதையில் மூழ்கியிருந்தவர்.
கவிஞர் கண்ணதாசனும் பெத்தடின் அடிக்ஸனில் இருந்து மீள முடியாமல் தவித்தவர்.
Addiction is a destructivie disease. Simply devastating.
சந்திரபாபு தன் சொந்த ஊரான தூத்துக்குடியில் ரயில்வே ஸ்டேசனில் ஏதோ தகராறில் ஈடுபட்டபோது கடுமையாக தாக்கப்பட்டார். He was a trouble maker.
கவனியுங்கள். அவருடைய சொந்த ஊரில். அவருடைய ஃபெர்ணான்டோ சமூகத்தை சேர்ந்தவர்கள் தூத்துக்குடியில் அதிகம். அப்படியிருந்தும் தாக்கப்பட்டார். சந்திரபாபு ஒரு தமிழ் திரைப்பட நடிகர் என்று தெரிந்து தான் அவரை அடித்தார்கள். ’ஏன்டா நீ பெரிய நடிகன்னா என்னா வேண்ணாலும் செய்வியா?’ என்று சொல்லி சொல்லி அடித்திருக்கிறார்கள். Disgrace.
முகமெல்லாம் வீங்கிப்போய். உதட்டில் கூட காயத்தோடு வந்த சந்திரபாபுவை சென்னையில் பார்த்து விட்டுத் தான், மிகவும் அதிர்ந்து போய் கண்ணதாசன் தன் பெத்தடின் போதைப் பழக்கத்தை உடனடியாக கைவிட்டார்.




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.