Share

May 31, 2018

கும்பல்ல கோவிந்தா


அரசியல் நடப்புகள் பற்றி முடிந்தவரை பல்லை கடித்துக்கொண்டு இது பற்றி விரிவாக எழுதக்கூடாது என்று தவிர்ப்பவன் நான். கோரஸ் பாடக்கூடாது என்கிற உறுதி.
ரஜினி தூத்துக்குடி விவகாரம் ’தூத்தூ’ என்கிற அளவில் இறங்கியதைப்பார்த்த போது எழுதத் தான் வேண்டியிருக்கிறது. இந்த இணைய கோரஸில் நானும் இணையத்தான் வேண்டியிருக்கிறது. கும்பல்ல கோவிந்தா? என் சத்தம் யாருக்கு கேட்கப்போகிறது?
ரஜினிக்கு தர்ம அடி நானும் தான் கொடுக்க வேண்டியிருக்கோ?
துப்பாக்கி சூடு போது ரஜினி எல்லோரும் போலத் தான் கோரஸ் பாடினார்.
தூத்துக்குடி போய் அங்கே 13 குடும்பங்களுக்கு தலா 2 லட்சம், காயம்பட்டவர்களுக்கு பத்தாயிரம் கொடுத்து விட்டு அவர் பின்னர் பேசியிருப்பது பற்றி ஒரே வார்த்தை. நாராசம்.
கிட்டத்தட்ட முதல்வர் ஆகி விட்ட பிரமையில் தான் ரஜினியின் விமான நிலைய பேட்டி. தன்னை இப்போதே முதல் அமைச்சராக பாவித்துக்கொண்டு தான் இப்படி பேசியிருக்கிறார்.
அவருக்கு போலீஸை அடிப்பது பற்றி ஒரு கடுங்கோபம் இருக்கிறது. அதை முன்னர் போலவே இப்போதும் வெளிப்படுத்தியுள்ளார்.

Every hero becomes a bore atlast.
அதனால தான் ஒர்த்தன் “ நீங்க யாரு”ன்னு தூத்துக்குடியில கேட்டிருக்கான்.
சினிமாவில என்னமா வீர வசனம். கோடிக்கணக்கில சம்பளம் வாங்கிக்கிட்டு
“ நாங்க ஏழைங்க நினைச்சா…”ன்னு விரல உயர்த்துவாரு.
சினிமாவில இன்னைக்கி “காலா” வரை போராட்ட வசனம் பேசுறாரு.. நிஜமான தார்மீக கோப போராட்டங்கள் தமிழகத்தை சுடுகாடாக்கி விடுமாம். Double standard. Split personalitiy.
ஊடுறுவிய சமூக விரோதிகள் யாரென்று தெரியுமாம்.
சமூக போராளிகளை சமூக விரோதிகள் என்று சொல்வது அதிகார வர்க்கத்தின் cliché.
சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் ஒரு சமூக விரோதியையாவது காட்ட முடியுமா?
’வன்முறை’க்கு எதிராக பேசுவது எவ்வளவு சுலபமான விஷயமாகி விட்டது. Rajini’s so called Non-violence itself is a cruel violence.
கொக்குக்கு ஒரு புத்தி. ஒற்றை பரிமாண வியாக்யானம்.
அதிகார வர்க்கத்திற்கு டப்பிங் பேசியிருக்கிறார். தன்னை அதிகார வர்க்க ’சக்தி’யாகவே கூட பாவிக்கிறார்.
பத்திரிக்கையாளர்களை விஜயகாந்த் ’த்தூ’ என்று காறித்துப்பியதற்கும், எஸ்.வி.சேகர் களங்கப்படுத்தியதற்கும், இப்போது ரஜினி பத்திரிக்கையாளர்கள் மீது காட்டியிருக்கிற துவேசம், அலட்சிய பார்வை, திமிரான கடுங்கோப உடல் மொழிக்கும் வித்தியாசமே கிடையாது.
பத்திரிக்கையாளர்கள் முதுகில் அவர் பிரம்பாலடித்தது, தூத்துக்குடியில் நூறு நாட்கள் போராடிய குடும்பங்கள் மீதும் விழுந்த அடி. ஒட்டு மொத்த தமிழ் மக்கள் முதுகிலும் விழுந்துள்ள அடி.
அவர் ரொம்ப தீர்மானமாக தெரிவித்துள்ள கருத்து மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் ஆதரவான கார்ப்பரேட் காவியம்.
’பாரதிய ஜனதாவின் ஊது குழலாக இயங்கப்போகிறேன் நான்’ என்ற திட்டவட்டம்.
உறுதியாக பாரதிய ஜனதாவின் தயவில் நான் முதல்வராகப்போகிறேன் என்ற ஆணித்தரம்.
No doubt, Rajini is ’The Apple’ of Bharathiya Janatha’s ’Eye’!

.............

தீமை செய்திடாமே சோரம் செய்திடாமே ஊரை ஆளவே முடியாதா?
செம்மைதீர் அரசியல் அநீதி!
Power mongers campaign in Fair Poetry and govern in Foul Language.
பதின்மூன்று மனித உயிர்களை காக்காய் சுடுவது போல சுட்டுக்கொன்ற அநியாயம். பாவிகளா.
இப்படி காக்காயை துச்சமாக எழுதக்கூட குற்ற உணர்வாய் இருக்கிறது.
”மனிதாபிமானத்தை விட ’சர்வ ஜீவ தயை’ மேலானது” என்பாரே தி.ஜானகிராமன்.
..........................

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.