Share

May 26, 2018

சால்சா மணி - அனு கல்பனா- ஜானி


டான்ஸர் சால்சா மணி 2009ல் விஜய் டிவி பிரபலம். இவர் மனைவி ஷீலாவுடன் இணைந்த ஜீதமிழ் சானலில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் கில்லாடி சாகச நிகழ்ச்சி ஞாபகமிருக்கலாம்.

ஷீலா சில நாட்கள் கூத்துப்பட்டறையில் பயிற்சிகளில் கலந்து கொண்டதுண்டு.

இந்த தம்பதி செல்லமாய் வளர்க்கும் நாய் பற்றி - ரோட்டில் கண்டெடுத்த ஒரு சாதாரண அனாதை குட்டி நாய். வெளி நாட்டு ஜாதி நாய் அன்று.

இப்போது சால்சா மணி என்ற மணிகண்டன் சசிதரன் கூத்துப்பட்டறையில் முழுநேர நடிகர்களுக்கு டான்ஸ் க்ளாஸ் எடுக்கிறார்.
சினிமாவில் மாஸ்டர். அவர் choreography செய்திருக்கிற பாடல்களை பார்த்தேன்.
உங்களுக்கு பிடித்த ஆதர்ஸமான டான்ஸர்ஸ் ஆண் பெண் இருவரிலும் யார் யார்? என்று கேட்டேன்.

ஆச்சரியமான பதில் சொன்னார். ஏனென்றால் இப்படி கேட்டால் கமல்ஹாசன், பிரபுதேவா என்பதாக அல்லது மைக்கல் ஜாக்ஸன் தான் என பதில் சொல்லும் டான்ஸர்கள் தான் உண்டு.
சால்சா மணி அபூர்வமான பதில் சொன்னார். A magnanimous person!
”ஆண்களில் ஜானி மாஸ்டர். Johnny became a Choreographer in the cinefield. பெண்களில் அனு கல்பனா. சினிமாவில் க்ரூப் டான்ஸர். இவர் டான்ஸ் மாஸ்டர் ஆகவேயில்லை.”
ஜானி, அனு கல்பனா இருவருமே unsung and unhonoured.
வித்வத் வேறு, ப்ராபல்யம் வேறு.
ஜானி ‘கொஞ்ச நாள் பொறு தலைவா’ பாடலில் அஜீத்துடன் க்ரூப் டான்ஸர் ஆக ஆடுவதை யூட்யுப்பில் சுட்டிக்காட்டினார். உண்மை. பிரமாதமான மூவ்மெண்ட்ஸ்.
பிரபுதேவாவுடன் ஆடும் க்ரூப்டான்ஸராக அனு கல்பனாவை அடையாளம் காட்டினார். என்ன ஒரு க்ரேஸ். என்ன ஒரு துடிப்பு. என்ன ஒரு வேகம்.

நடனத்தில் அபூர்வ திறமையுள்ள இவர்கள் இருவரும் டான்ஸ் மாஸ்டர்களாக பேரும் புகழும் பெற வேண்டும்.

சால்சா மணியும்  தனக்கான இடத்தை அடைவார். His whole future is before him. He will see greater things in life.
………………………………….
புகைப்படங்களில் சால்சா மணியுடன் ராஜநாயஹம்


https://rprajanayahem.blogspot.in/2018/02/blog-post_27.html

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.