Share

Sep 17, 2008

சங்கு,கண்ணப்பன், லச்சம்

தி ஜானகி ராமனின் மோகமுள் நாவலில் வரும் 'சங்கு ' கதாபாத்திரம் , க நா சு வின் குறுநாவல் ஆட்கொல்லி யில் வரும் 'கண்ணப்பன்' , சுந்தர ராமசாமியின் 'குழந்தைகள் , பெண்கள், ஆண்கள்நாவலில் வரும் ' லச்சம் ' இவர்கள் மூவர் பற்றி .....

சங்கு , கண்ணப்பன் , லச்சம் மூவரும் ரத்தமும் சதையுமான , வாழ்க்கை தாகம் கொண்ட ,உற்சாகமானவர்கள் . ஆனால் வாழ்க்கையால் நிராகரிக்கபட்ட , தோற்றுப்போன துரதிர்ஷ்டசாலிகள் .

நீங்கள் இந்த கதாபாத்திரங்களை இணைத்து பாருங்கள் . அர்த்தம் புரியும் . இன்றைய சூழலில் இந்த மூவரையும் இணைத்து ஒரு நாவல் எழுதிப்பார்க்கலாம் . 'இணைத்து' என நான் குறிப்பதை 'ஒப்பிட்டு' என்று அர்த்தபடுத்திகொன்டீர்கள் ஆகில் ஒரு மோசமான பல்கலைக்கழக ஆய்வு கட்டுரை நூலாகிவிடும் .அல்லது செக்குமாட்டு விமர்சனமாகிவிடும் ஆமாம் . அப்படி இணைத்து எழுதப்படும் நாவல் ' நிந்தனை ' , மான பங்கம் , மானுட அவலம் குறித்த விசாரணையாக அமையலாம் . மனதிலேயே கூட எழுதிப்பாருங்கள் .தப்பில்லை . நான் எழுதிப்பார்த்து விட்டேன் மனதில் .

எழுதிப்பார்ப்பதற்கு ஆதர்சமாக ஒரு நூல் வேண்டுமா ? ஆல்பெர் காம்யு(Albert Camus) வின் ' The Out sider' மற்றும் ' The Fall ' இரண்டு நாவல்களையும் எடுத்துகொள்ளலாம் .இந்த இரண்டு காம்யுவின் நாவல்களையும் தத்துவ விசாரணைக்காக பயன் படுத்தி இப்போது இந்த எளிய கதாபாத்திரங்களை கையாளலாம் ....
நாவலை அச்சில் கொண்டு வர வேண்டும் என்று விபரீத ஆசையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் ...அப்புறம் குப்பையாகி விடும் !


)

1 comment:

  1. I have read Anniyan in Tamil of Ālper Kāmyu. (if you are talking about the French Ecrivan, who lived only for 47 years...)

    Very detailed, like you say.

    S Ramakrishnan's descriptions of walking, looking at something.... follows.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.