Share

Sep 9, 2008

இரண்டு பொன்மன செம்மல்கள்

தங்க நகை கடை பஜார் .

ஒரு நகை கடை . உள்ளே நுழைகிறேன் . நான் தந்த பெருந்தொகை க்கு பல மாதங்களாக அந்த நகைகடை முதலாளி வட்டி தரவே இல்லை . முதலும் திரும்பி வரவில்லை .ஏன் ?

" மைனர் வாங்க உட்காருங்க . ஐயோ மைனர் . காபி ,கூல்ட்ரிங்க்ஸ் சாப்பிட மாட்டேனு பிடிவாதமா இருக்கீங்களே . திருச்சி வயலூர் முருகனை போய் கும்பிட்டேன் . அப்பிடியே சமயபுரம் ஆத்தாளுக்கும் ஒரு அர்ச்சனை பண்ணிட்டேன் . கேரளாவிலே ஒரு விஷேசமான கோவில்னு சொன்னாங்க . அங்கேயும் போய் என்ன எழவு செய்யனுமோ செஞ்சிட்டு வந்துட்டேன் பாத்துக்கங்க . ஐயோ மைனர் ! திருச்செந்தூர் முருகனுக்கு என் முடி , என் பிள்ளைகள் முடி எல்லாத்தையும் காணிக்கையா கொடுத்துட்டேன் போங்க .முந்தா நாள் தின தந்தியிலே ஒரு விளம்பரம் . ஒரு தாயத்து..ரொம்ப விஷேசமான தாயத்தாம் . அதை கையில வச்சிகிட்டா அஷ்ட லக்ஷ்மியும் கிடைக்குமாம் . அதற்கும் மணி ஆர்டர் நூறு ரூபா அனுப்பிட்டேன் . நான் என்ன செய்யட்டும் நீங்களே சொல்லுங்க ."




இன்னொரு நகைகடை . முதலும் வட்டியும் இதே மாதிரி வராத நிலை . அந்த கடையில் நுழைகிறேன் . என் அசலை கொடுங்கள் .வட்டி போனாலும் பரவாயில்லை .
அப்போது நகைகடையில் ' தலைக்கு மேலே வெள்ளம் போனால் சான் என்ன ? முழம் என்ன ' பாட்டு சரணம் உச்ச ஸ்தாயியில் ."இது சத்தியம் !இது சத்தியம் !!" பழைய சினிமா பாட்டு. டிஎம் எஸ் பாடுகிறார்

அந்த நகைகடைகாரன் எனக்கு ஆறுதல் சொல்ல ஆரம்பிக்கிறான் .
" துரை ! இந்த பாட்டை கேளுங்க துரை . தைரியம் தான் துரை மனுஷனுக்கு முக்கியம் . மனசை மட்டும் விட்டுடாதீங்க துரை . இந்த பாட்டு தான் துரை எனக்கு இப்போ மருந்து . என்னமா பாடியிருக்கான் பாருங்க .இதை கேட்டுகிட்டு தான் நான் உசிரோடே இருக்கேன் . இல்லைன்னா எப்போவோ நான் போயிருப்பேன் . உங்களுக்கும் இந்த பாட்டு தான் துரை . நீங்களும் கேளுங்க . டே .... துரை பாட்டுன்னா ரொம்ப ரசிப்பாருடா . அந்த பாட்டை இன்னொரு தடவை போடுறா ..... டே "

Betrayal does that….betrays the betrayer- Erica Jong

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.