Share

Sep 13, 2008

பக்தி பிரவாகம்

சிவில் சப்ப்லைஸ் லைசென்ஸ் வாங்க அந்த நேரத்தில் தாலுகா ஆபீஸ் போயிருந்தேன் . அதற்கு பணம் கட்டுவதற்கு ஹெட் ஆப் த அக்கௌன்ட் நம்பர் தெரிந்தால் தான் பணம் கட்ட முடியும் . ஹெட் கிளார்க் இடம் கேட்டேன் . சமையல் எண்ணெய் வியாபாரம் அந்த ஊரில் துவங்குவதற்காக .

"திண்டுக்கல் போய் வாங்கி கொள்ளுங்கள் "

'உங்களுக்கு தெரியாதா ?'

"ஆமாம் சார் தெரியாது "

பியூன் வந்தான் .

'சார் ...ஹெட் கிளார்க்குக்கு பணம் கொடுத்தா ஹெட் ஆப் த அக்கௌன்ட் தருவார்'

அவன் சொன்ன தொகையை தருவதாக சொல்லி முடிக்கவும் வெராண்டாவிலிருந்து சிக்னல் கொடுத்தான் . உடனே சிரித்த முகத்துடன் ஹெட் கிளார்க் இருக்கையிலிருந்து எழுந்து கையை நீட்டியபடி கிட்டத்தட்ட ஓடியே என்னிடம் வந்தார் . பணத்தை அவர் கையில் எப்போது வைத்தேன் அதை எப்படி பாக்கெட்டில் வைத்தார் . நான் அறியேன் .

அவரே செல்லானை நிறைவு செய்தார் . பணத்தை கட்ட கிளம்பினேன் .

"சார் ஒரு நிமிஷம் சார் "- அவர்

'என்னங்க' -நான்

"நான் பெரிய ஆன்மீக வாதி சார் . வியாக்யானங்கள் எல்லாம் செய்வேன் . பக்தி தான் என் உயிர் மூச்சு . ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்று எல்லா வெள்ளிகிழமையும் பெருமாள் கோவிலில் ராமாயணம் மகா பாரதம் எல்லாம் அழகா விரிவா பிரசங்கம் செய்வேன் . நான் உருக்கமா வியாக்யானம் செய்யும் போது பார்த்தீங்கன்னா பல பக்தர்கள் , பெண்கள் கண்ணீர் விட்டு அழுவாங்க சார் .பக்தி இல்லாம நாடு வீணா போகுது சார் . வர்ற வெள்ளிக்கிழமை என் பிரசங்கம் கேட்க வர்றீங்களா சார் ."- ஹெட் கிளார்க் இப்படி பேசும்போதே தனக்கு தானே சொக்கி போய் விட்டார் ! அவர் தலையை சுற்றி ஒரு ஜோதி !!

4 comments:

  1. இது தான் சார் வாழும் வழி...

    ReplyDelete
  2. //பியூன் வந்தான் .//

    //அவன் சொன்ன தொகையை தருவதாக சொல்லி முடிக்கவும் வெராண்டாவிலிருந்து சிக்னல் கொடுத்தான் //

    **
    //உடனே சிரித்த முகத்துடன் ஹெட் கிளார்க் இருக்கையிலிருந்து எழுந்து கையை நீட்டியபடி கிட்டத்தட்ட ஓடியே என்னிடம் வந்தார் . //

    //பணத்தை அவர் கையில் எப்போது வைத்தேன் அதை எப்படி பாக்கெட்டில் வைத்தார்//

    //அவரே செல்லானை நிறைவு செய்தார் //

    ***

    When you talk about a person who does small job you use வந்தான்/கொடுத்தான் but when you talk about some powered man you use வைத்தார்/ செய்தார்

    :-((

    Money, education, reading story books or watching movie from western countries will not change a Indian man's thinking correct ? :-(((

    Do not worry ...you are not alone here ... here is a another guy ..

    http://www.sramakrishnan.com/view.asp?id=169&PS=1

    //அவை தொடர்ந்து வந்தபடியே இருந்தன. அதனால் எங்கள் வீட்டிற்கு தினமும் தபால்காரன் வருவான். //

    //தபால்காரனுக்கு எல்லா குடும்பங்களின் கதையும் தெரியும். பெரும்பான்மை போஸ்ட்கார்டுகளை தபால்காரன் படித்திருப்பான். ஆகவே அவனால் அதைப்பற்றி சொல்வதும் உண்டு.//

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.