Share

Sep 30, 2009

Carnal Thoughts-24

மானபங்கம்

Cattle Class புகழ் சசிதரூர் அவர்களுக்கு சமர்ப்பணம்.

பதினொரு வருடங்களுக்கு முன்

அண்ணா சதுக்கம் பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்த பெயர் சொல்ல விரும்பாத பெண்மணி சொன்னார் -
" தினமும் 27Aபஸ்சில் திருவல்லிக்கேணி வரை வர்றேன். எழிலகத்துல க்ளார்க்கா வொர்க் பண்றேன் . பஸ்சில் உரசிட்டு நிக்கிறவனுங்க.....இப்படி கூட்டத்திலே வேணும்னே மோதுரானுங்க.வெட்கத்தை விட்டு சொல்றேன். வீட்டுக்கு போயி புடவையை அவிழ்த்துப் பார்த்தா அங்கங்கே திட்டுத்திட்டா ...காஞ்சி போயி ....அந்த அசிங்கத்தை தொட்டுத் துவைக்கவே கை கூசுது ..........பின்னாலிருந்து தாக்குகிற இந்த வெறி பிடிச்ச மிருகங்களை எங்களுக்கு அடையாளம் தெரியும். தெரிஞ்சு என்ன பண்ணுறது ?"
- ஜூனியர் விகடன் ஆகஸ்ட் 9,1998
............

"ஹரி,ஹரி,ஹரி என்றாள்
அபயம் அபயம் உனக்கு என்றாள்........
நம்பி நின்னடி தொழுதேன் - என்னை
நாணழியாதிங்குக் காத்திடுவாய் ..........
இங்கு நூற்றுவர் கொடுமையைத்
தவிர்த்தருள்வாய்"

பாஞ்சாலிக்கு அவள் வாழ்வில் ஒரு நாள் தான் மானபங்கம்.


Sep 29, 2009

காந்தியார் மரணம் மோகமுள் நாவலில்


மோகமுள் நாவலில் கதைநாயகன் பாபுவும் கதைநாயகி யமுனாவும் காந்தி மரணம் மீதான உணர்வுகளை பேசுகிறார்கள்.


பாபு : மனுஷன் போய் எட்டுமாதமாகி விட்டது... இந்த மனிதன் போய்விட்டார் என்று கேட்டதில் இருந்து வேண்டியவர்களைப் பார்க்கிற போதெல்லாம் அழுகை குமுறி,குமுறி வந்தது . டவுனில் ( சென்னை ) தியாகராஜ ஆராதனை அன்று சாயங்காலம் கச்சேரி நடக்கிறபோது யாரோ ஒரு இளைஞன் வந்தான் . கச்சேரிக்கு நடுவில் ஓடி வந்து முகம் பேயறைந்தாற்போல் கோண , " அண்ணா " என்று வித்வானைப் பார்த்து ஒரு சத்தம் போட்டான் .திடீரென்று வாத்யம் , பாட்டு எல்லாம் நின்று விட்டது . " காந்தி செத்துப் போயிட்டாராம் அண்ணா " என்று விசித்து அழத்தொடங்கி விட்டான் .
"என்னது "
" எப்ப "
" என்னடாது .... ஏய் பாலு .."
" யார்ரா சொன்னா ?"
" ரேடியோவிலே அண்ணா ''
ஒரே கலவரம். வெளியே கடைகளை அவசரமாக அடைத்துக் கொண்டிருந்தார்கள் .பார்க்கிற முகம் எல்லாம் அழுதுகொண்டிருந்தது .

யமுனா : ஆமாம் பாபு . நானும் அம்மாவும் திருவையாத்திலே அன்னிக்கு , கச்சேரி கேட்டுக்கொண்டிருந்தோம் .திடீர்னு ஒருத்தர் வந்து சொன்னார் . பந்தல் முழுக்க எழுந்து விட்டது . ஒரே அழுகை. ஒரு போலீஸ்காரன் குழந்தை மாதிரி தேம்பித் தேம்பி அழுதான். அம்மா மூச்சை போட்டு விழுந்துவிட்டாள்.

பாபு : புத்ரா என்று சுகனைப் பார்த்து கூப்பிட்டாராம் வியாசர் . பிரிவு தாங்காமல் மரங்கள் கூட ஓலைமிட்டதாம் . கூலிக்கு விழுந்த அடி மதுரை முழுவதும் விழுந்தது . இந்த உயிரை மரணம் பிடுங்கும்போது ஜீவராசி எல்லாம் நொந்து துடிச்சது.