Share

Nov 21, 2020

Don't cry

 கல்யாணம், இழவு எல்லாமே ரொம்ப எந்திரத்தனமான சம்பிரதாயங்கள்.


நிறைய வேஷ விஷயங்கள் நிரம்பியது.

எவ்வளவோ நூற்றுக்கணக்கான கல்யாணங்களுக்கு போய், கிரகப்பிவேசங்களுக்கு, பிறந்த நாள் வைபவங்களுக்கு போனாலும் சரி போகாவிட்டாலும் கூட அளவுக்கதிகமாக மொய் செய்த நான் சென்ற ஆண்டு என் மகன்களின் திருமணங்கள் நடந்த போது ஒருவருக்குமே அழைப்பிதழ் தரவேயில்லை என்பதை அறிய வந்த போது கி. ரா. ரொம்பவே மனதார பாராட்டி மகிழ்ச்சி தெரிவித்தார்.

எவ்வளவோ எழவுகளுக்கு எடுத்தேறி செலவழித்திருக்கிறேன்.

என் தாய், தந்தை சமாதிகளை நான் பார்த்ததில்லை. மதுரையில் எங்கே இருக்கின்றன என்பதும் இன்று வரை தெரியாது.

2013ல் என் தகப்பனார் இறந்த நேரத்தில்   ஏழு மாத  காலமாக வேலையில்லாமல் இருந்தேன்.
கண்ணில் ஒரு சொட்டு கண்ணீர் வரவேயில்லை.
சாவுக்கு போன நான் ஈமக்கிரியைகளில் கலந்து கொள்ளவில்லை.

2014லில் ஆறு மாதம் வேலையில்லாமல், (இதில் பார்த்த வேலைக்கு சம்பளம் இல்லாமல் இரண்டு மாதங்கள்)                     என் அம்மா இறந்த அன்று தான் புதிய வேலைக்கு சேர்ந்திருந்தேன்.
'அம்மா எறந்துட்டாங்க. 'அலை பேசி செய்தி. அம்மாவே போன பிறகு யார் முகத்தை போய் பார்க்க வேண்டும்?

வகுப்புக்கு போய் பாடம் நடத்தினேன்.

குழந்தைகள் முன் அம்மா இறந்த அன்றும் கூட பாடினேன்

When I was just a child I asked my mama
What will I be?
Will I be a doctor?
Will I be an actor?

This what she said to me.
'Che Sara, sara
What ever will be,
Future is not ours to see
Che Sara, sara

அடக்க முடியாமல் பீறிட்டு கலங்கியழுத போது குழந்தைகள் 'Why do you Cry sir?' என குழம்பிக்கேட்ட போது நான் 'I have no father and mother'

All the children consoled me : 'Don't cry sir. We are all with you. 
Don't cry sir '


ALBERT CAMUS  'THE OUTSIDER' novel begins with these words - 
"My mother is dead. 
Was it today or yesterday?"
.... 

....

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.