Share

Jun 13, 2020

உங்க ஊர் எதுங்க?

உங்க ஊர் எதுங்க என்று  ஒருவரை 
கேட்க நேர்ந்தது. 

அவர் " 'பு 'நால ஆரம்பிச்சு 'டை ' யன்னாலே முடியுற ஊர் தான் என் ஊருங்க " என்றார். 
"முதல் எழுத்து ' பு '.கடைசி எழுத்து 'டை ' " என்று மீண்டும் சொன்னார்.

நான் அதீத ஆரோக்கிய பிரக்ஞையுடன்
 இதை அலசி ஆராய்ந்து, 
இந்த மனிதர் தத்துவார்த்தமாக 
சித்தர் பாணியில் பேசுகிறார் போலும் 
என யோசித்தேன்.

இவர் கொஞ்சம் வித்தியாசமான 
கணியன் பூங்குன்றன்? 

எல்லோருக்கும் நேடிவ் ப்ளேஸ் 
பெண்ணின் பிறப்புறுப்பு தானே
 என பரந்த மனசோடு 
சொல்கிறாரோ என்னவோ. 

இந்திரன் பற்றி ஒரு  செய்தி. 

எல்லோரும் யோனித்துவாரத்தின் வழி தான் பிறந்தாக வேண்டும். ஆனால் இந்திரன் மட்டும் யோனியிலிருந்து பிறக்க மறுத்து விட்டானாம்.

அது அசிங்கமான வழியென்று சொன்னான். 
அரிதாக அவன் 
தன் தாயின் பக்கவாட்டிலிருந்து,
விலாவிலிருந்து சமாளித்துப் பிறந்து விட்டானாம். 

பூங்குன்றன் ' யாதும் ஊரே'என்றார். 

இவர் 'எல்லோருக்குமே ஒரே.. ஒரே ஒரு ஊர் தான்' என இயம்புகிறாரோ?..

அவரே சஸ்பென்சை உடைத்து சொன்னார். 

" புதுக்கோட்டை "

எல்லோரிடமும், எந்த ஊர் என்று யார் கேட்டாலும் எப்போதும் அப்படித்தான் சொல்வாராம்.

 சொல்லி விட்டு குலுங்கி குலுங்கி 
அவரே வெடி சிரிப்பு சிரித்தார்.

இவரே பலரிடம் எடுத்து கொடுப்பாராம் 
" என் ஊர் எதுன்னு கேளுங்களேன்" 

( ஆங்கிலத்தில் PUDUKKOTTAI. இதை வைத்துக் கூட அந்த புதுக்கோட்டைக்காரர் ஒரு ஜோக் சமைக்கலாம்) 

..... 
 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.