Share

Mar 18, 2018

இது ரஜினி சமாச்சாரமில்ல


முதல் மனைவி முத்துக்கண்ணு. அப்படியிருந்தும் ஒரு strong affair. அதுவும் எம்.ஜி.ஆரின் கதாநாயகியோடு. ”ஏப்பா கேள்விப்பட்டனே.. மஞ்சுளாவோட சேர்க்கையா..உண்மையா” என கேட்ட சாண்டோ சின்னப்ப தேவரிடம் “என்னண்ணே! நீங்களுமா இதை நம்புறீங்க. அப்படியெல்லாம் நான் செய்வேனா? நம்ம ஜாதியென்ன? அப்படியெல்லாம் ஜாதிய தூக்கி போடுகிற ஆள் நான் இல்லண்ணே.” என்று சொன்ன விஜயகுமார்.
மஞ்சுளாவுக்கு எல்லா திரைப்பட நடிகைகளுக்குமுள்ள சிக்கல்கள் இருந்தது. கதாநாயகியாக நடித்த எங்கள் தங்கராஜா, உத்தமன் படங்களின் தயாரிப்பாளர் வி.பி.ராஜேந்திர பிரசாத்தை திருமணம் செய்யவிருப்பதாகக் சொல்லிக்கொண்டிருந்தார். அவருடன் ஊட்டியில் ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்த போது ரிஸப்சனிஸ்ட்டிடம் கூட அப்படி மஞ்சுளா சொல்லியிருக்கிறார்.
ஆனால் இப்படி ஸ்டேட்மெண்ட் எல்லாம் தண்ணீரில் எழுதிய எழுத்தாக மாறும். மன்மத பாணம் மாறி மாறி வெவ்வேறு விதமாக வீசப்படும் போது எப்படியெப்படியெல்லாமோ திசை மாறி விடும் காட்சிகள்.
An ever-shifting kaleidoscope ...............all patterns alter!

எம்.ஜி.ஆர் காதிற்கு விஜயகுமார் மஞ்சுளா காதல் விஷயம் தெரிய வந்த போது எது அவரை கோபப்படுத்தியதோ?
வாஹினி ஸ்டுடியோவில் மேக் அப் ரூமில் இருந்த எம்.ஜி.ஆர் உத்தரவுப்படி அந்த ஸ்டுடியோவில் நடித்துக்கொண்டிருந்த விஜயகுமார் அவரை பார்க்க பதட்டத்துடன் வருகிறார்.
மேக் அப் ரூமில் விஜயகுமார் நுழையு முன் அவருடைய தலைமுடியை பிடித்து உள்ளே எம்.ஜி.ஆரின் கை அவரை உள்ளே இழுப்பதை ஸ்டுடியோவில் இருந்த பலரும் பார்க்கிறார்கள்.
கவனிப்பு உள்ளே எப்படியிருந்திருக்கும் என்பதைப்பற்றி யூகிக்க அதிக சிரமமில்லை.
மண்டகப்படி முடிந்த பின் விஜயகுமாரிடம் சீப்பை கொடுத்து “தலை சீவிக்கொண்டு வெளியே போ” என்று எம்.ஜி.ஆர் சொல்லியிருக்கிறார். விஜயகுமார் ரோஷத்துடன் சீப்பை அலட்சியப்படுத்தி விட்டு கலைந்த தலையுடனே மேக் அப் அறையிலிருந்து வெளியேறியிருக்கிறார்.
There is no wound that time cannot heal!
”அண்ணா நீங்க நினைச்சபடி நடந்துருக்கு
புரட்சி தலைவர் கையில் நாடிருக்கு” என்ற பாடலுக்கு பின்னால் ஒரு படத்தில் அதிமுக கொடி பிடித்து விஜயகுமார் நடித்தார்.
உற்சாகமாக “கொடுக்கின்ற கை, துன்பம் துடைக்கின்ற கை, மக்கள் நம்பிக்கை கொண்டிங்கு இப்போ அரசாளுது” என்று அடித்த கையை புகழ்ந்து லாலி பாடினார்.
எம்.ஜி.ஆரிடம் அடி வாங்கியவர்களெல்லாம் அவரை தூக்கி பிடிப்பது புதிதல்ல. அதிசயமுமல்ல.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.