Share

Oct 25, 2017

Day to day issues


நெல்லையில் கந்துவட்டிக்கு கருகிய பாவப்பட்ட ஜீவன்கள்
”இன்னும் என்ன நம்பிக்கையில் பூக்களையும் குழந்தைகளையும் பூமிக்கு அனுப்புகிறாய்” என்று ஆண்டவனைப் பார்த்து கோபத்துடன் கேட்ட அப்துல் ரகுமானின் கவிதை தான் நினைவுக்கு வருகிறது.


மிகுந்த வலியை ஏற்படுத்தி நெஞ்சை ரணமாக்கும் வலிமையுடையவை 
பெண்களின் கண்ணீரும், குழந்தைகளின் கண்ணீரும்
......................
டி.வி ப்ரோக்ராம் ஒன்றில் ஓவியா ஒரு முதியோர் இல்லத்தில்.
ஓவியாவுடன் பழைய நடிகர் ஒருவர் நடிப்பதாயிருந்தால் யாரை சொல்வீர்கள்? யார் நடித்தால் பொருத்தமாயிருக்கும்? என்ற கேள்வி.
முதிய பெண்மணி சொல்கிறார் “ ஜெமினி கணேசன்.”
’காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியா’

...........................................
”உலகத்தில் உள்ள அனைத்து பிராண்டுகளும் மிகக்குறைந்த விலையில்” வசந்த் அன் கோ முதலாளிக்கு ’டார்லிங் டார்லிங்’ கல்லாப்பெட்டிசிங்காரம் பாடிலாங்க்வேஜ்.
...........................................
பாலு மகேந்திராவின் சீடர் பசுபதி.
வெற்றி மாறனின் ‘பொல்லாதவன்’, ’ஆடுகளம்படங்களில் உதவி இயக்குனர்.
நான் திருப்பூரில் இருக்கும் போதே என்னை சந்திக்க ஆர்வமாக வந்தும் சந்திக்க முடியாமல் போயிருந்திருக்கிறது.நான் சென்னை வந்த பின் என்னை சந்தித்த வியாசன் சொன்ன தகவல்இங்கே பக்கத்தில் தான் கூத்துப்பட்டறைஎன் வாழ்க்கையில் வசந்தத்தை ஏற்படுத்தியது. உடனே நான் கூத்துப்பட்டறையை கண்டு பிடித்து .முத்துசாமியை சந்தித்தேன். இன்று நான் கூத்துப்பட்டறையில் இருப்பதற்கு அந்த சந்திப்பு தான் வழி வகுத்தது.
வியாசனின் வாழ்க்கை துணைவி யாமினி.வியாசனின் நண்பர்கள் டாக்டர் ராஜா(கவிஞர்), டாக்டர் வசந்த் போன்ற அற்புதமான மனிதர்கள். என்னுடைய எழுத்தின் great admirers.
.........................




chevron-right





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.