Share

Oct 31, 2017

சல சல சல


கருணாநிதி கொள்ளுப்பேரன் மனு ரஞ்சித். மனு? சோழர் பரம்பரை என்பதால் மனு நீதி சோழன் என்று பதில் வரும்.

மு.க.முத்துவின் மகள் பெற்ற மகனுக்கும் நடிகர் விக்ரம் மகளுக்கும் கல்யாணம். சரி.. ஒரே மணவாடு. ஒன்னுக்குள்ள ஒன்னு. ஜாதிக்குள்ள கல்யாணம்.
மு.க.ஸ்டாலின் தன் அண்ணன் பேரன் கல்யாணத்தை ஒதுக்கி விட்டு முத்துராமலிங்கத் தேவர் சமாதிக்கு போயிருக்கிறார்.
என்னய்யா? கல்யாணத்திற்கு வந்து விட்டு தேவருக்கு அஞ்சலி செலுத்தப்போவது சிரமமா? தமிழக அரசியல் முக்கியத்துவம் பெற ’வீட்டு அரசியல்’ காரணமாகியிருக்கிறது.
மு.க.முத்துவின் பிரியமான தம்பி மு.க.அழகிரியும் துரை தயாநிதியும் வருகை தந்து கௌரவித்திருக்கிறார்கள்.
பேரன் கல்யாணத்திற்கு மு.க. முத்து வந்திருந்தாரா? என் சந்தேகத்தை உறுதி செய்யும் விதமாக ’இந்து’ தமிழ்பத்திரிக்கையில் கல்யாணத்திற்கு வந்தவர்கள் லிஸ்ட்டில் முத்து பெயர் இல்லை. டி.வி. செய்திகளிலும் அவர் தலை தென்படவில்லை. யாராவது இந்த என் சந்தேகத்தை நிவர்த்தி செய்யுங்களேன். வந்திருந்தால் அவரை விட முக்கியமானவர் வேறு யார்? முத்துவை முக்கியத்துவம் கொடுத்து டிவி சானல்கள் காட்டியிருக்க வேண்டும்.

மு.க.முத்துவுக்கு உடல் நலக்குறைவு என்றெல்லாம் காதில் பூ சுற்றலாகாது பாப்பா! கருணாநிதியை வீல் சேரில் கொண்டு வந்து விட்டு இப்படி சொல்லக்கூடாது. இன்னொரு வீல் சேரில் முத்துவை கொண்டு வந்து மீடியாவுக்கு காட்டி விட்டு போயிருக்கலாமே.
முத்துவின் ஆரோக்கியம் மோசமாயிருப்பது இன்றைய செய்தியல்ல. 2011 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில்கூட மு.க சொன்னார்
“ என் மூத்த மகன் முத்துவின் உடல் நிலை மிகவும் மோசமாய் இருக்கிற சூழலில் நான் இந்த திருப்பூர் மேடையில் பிரச்சாரம் செய்ய வந்திருக்கிறேன்.”

………………………………………….
ஜெ.தீபாவ கொஞ்ச நாள் காணோம்னு தமிழகம் தவிச்சு தக்காளி வித்ததாமே. ’என் சொந்த விஷயம். தலையிட யாருக்கும் உரிமையில்ல’ன்னு தீபா பொங்கிடுச்சாம். தன்னோட டிரைவர் ராஜாவை டிரைவர் ராஜான்னு சொல்றது அம்மாவுக்கு பிடிக்கல.

இந்த ராஜாமார் தொல்ல தாங்கல. 
ராஜான்றது comman name.

டி.ராஜா கம்யூனிஸ்ட், 

ஹெச்.ராஜா பி.ஜே.பி., 

’2ஜி’ ராஜா தி.மு.க.
ராஜான்னு மொட்டயா சொன்னா யாருக்குப் புரியும்.

ஆனா இளையராஜாவ ராஜான்னு தான் பலரும் இப்ப இங்க குறிப்பிடுறாங்க. ராஜான்னா அது இளையராஜா தான்.
இந்த தீபா ராஜாவ யாரும் இனிமே டிரைவர் ராஜான்னு சொல்லாதீங்களேன்.
தீபா ராஜா கொஞ்ச நாள் முன்னால தீபா புருஷன் மாதவன போயஸ் கார்டன் வீட்டு முன்னால கிழிச்ச கிழி ”நாடு மறக்குமா?”
………………………………………
வெள்ள பயம் நேரத்தில மந்திரி வேலுமணி அமெரிக்காவ விட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சொன்னார். நல்ல விஷயம். நம்பத்தான் வேண்டும். ஆனா.. ? டிரம்ப் எல்லாம் எங்களுக்கு ஜுஜூபின்னு சொல்றாரா?…அது மரியாதயில்ல… அது மரியாதயில்ல…
வேலுமணி உத்திரவாதத்தால் கொஞ்சம் நிம்மதி ஏற்பட்ட நேரத்தில் சென்னை அடுத்துள்ள ஓட்டேரி கால்வாய் உடைந்து குடியிருப்பு பகுதிக்குள் கழிவு நீர் புகுந்தது’ன்னு செய்தி வருதே… ஐயய்யோ…
..................................................................




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.