Share

Feb 26, 2009

ரெட் கார்ப்பட் வெல்கம்

நேற்றைய 01.03.2009 தேதியிட்ட ஜூனியர் விகடனில் ' ஒரு பெண் கவிஞரின் டெல்லி புலம்பல் ' என்ற ரிப்போர்ட் படித்தேன் .

எனக்கு ஏனோ 'சிவந்த மண் ' படத்தில் திவான் நம்பியார் போராளிகளை கண்டு பிடிக்க முயலும் போது நாகேஷ் தன் நடவடிக்கைகளால் சிவாஜி தொடங்கி , விஜயன்,மாலி என்று தன் சகாக்களான போராளிகளை காட்டி கொடுத்த காட்சி தான் நினைவுக்கு வந்தது .

அம்மணி 'விடுதலை புலிகள் மலையக தமிழர்களை விரட்டியடித்தவர்கள் , முஸ்லிம்களை கொன்றவர்கள் ,விரட்டியடித்தவர்கள் . தலித்களுக்கு எதிரானவர்கள் ,ஜாதி வெறியர்கள்' என்ற பழைய உண்மைகளை எல்லாம் அவர் சொன்னார் , இவர் சொன்னார் என புட்டு புட்டு வைக்கிறார் .

இன்னொன்று டெல்லி பேரணிக்கு விளம்பரம் சரியாக கிடைக்கவில்லை என்ற கோபம் , எரிச்சல் .. மீடியாக்கள் கண்டு கொள்ளவே இல்லை . எத்தனையோ டிவி கம்பனிகளுக்கு தகவல் கொடுத்து பார்த்தும் யாரும் சீந்தவே இல்லை . 'என் டி டி வி காரனிடம் 'மங்களூர் பொம்பளைங்க அடி பட்டப்ப காட்டினீங்களே .அதை விட இலங்கையிலே கொடுமை நடக்குது அதனாலே எங்களை படம் பிடிச்சி உலகம் பூரா காட்டுங்க .தயவு செஞ்சு எங்களை படம் பிடிங்க ..ஏங்க வாங்கங்க ..வாங்க. .வாங்கங்க..ன்னு நூறு தடவை கெஞ்சினோம் . என் டி டி வி காரன் அயோக்கியன் ..எங்களை படம் பிடிக்க வரவே இல்லை . .' கவனிக்க ..Exhibitionism!

I am your mother , Fuck me I am your sister rape me என்ற பேனர்களை கூட யாருமே கண்டு அதிர்ச்சி கொள்ளவில்லை போலிருக்கிறது .

இன்னொரு எதிர்பார்ப்பு இருந்திருக்கிறது . டெல்லி போனதும் பேரணிக்கு அருந்ததி ராய் , மேதா பட்கர் இருவரும் ரெட் கார்ப்பட் வெல்கம் கொடுப்பார்கள் என்று ஒரு எதிர்பார்ப்பு! அதுவும் நடக்கவில்லை .இவர் அழைத்தும் வரவில்லை!

பகுஜன் சமாஜ் கட்சி , முஸ்லீம் அமைப்புகள் நிராகரித்து விட்டன .

முழுக்க சுய விளம்பர நோக்கம் என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது . விளம்பர நோக்கம் டெல்லி பிரமுகர்கள் ,கட்சிகள் , அமைப்புகளால் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டது !

இதன் மூலம் புகழ் வெளிச்சம் கிடைத்திருந்தால் ஒரு கட்சியிடம் சேர்ந்து எம் எல் ஏ சீட்டு எம் பி சீட்டு வரை கேட்டு அமர்க்களப்படுத்தி இருக்கலாம் . எல்லாமே வீணா போச்சு .

அம்மணி 'ஏன் நோபெல் பரிசு வாங்கிய நோம் சோம்ஸ்கி எங்கள் பேரணி யில் வந்து கலந்து கொள்ளவில்லை.ஒரு அறிக்கை கூடவா பேரணியை ஆதரித்து விடக்கூடாது ?' என்ற ஆவேசத்தை வெளிப்படுத்தாது தன்னடக்கத்தோடு விட்டு விட்டார் .

இலங்கை மக்களின் பரிதாப அவல நிலை அல்ல பிரதானம் , நாங்க டெல்லி போனோம் , நாங்க ஊர்வலம் போனோம் , எங்களுக்கு பிரமாதமான மரியாதை , அங்கீகாரம் விளம்பரம் ஏன் இல்லை ,இது அநியாயம் . அயோக்கிய தனம் ..........

அடுத்து இந்த ஜூனியர் விகடன் ரிப்போர்ட் முடிவில் இன்னொரு செய்தி ! இந்த டெல்லி பேரணி குழுவிலும் பெரும் அரசியலாகி இந்த குழுவும் உடைந்து விட்டதாம் . இது ஒன்றும் ஆச்சரியமில்லை ."தமிழ் நண்டுகள் கதை" எல்லோருக்கும் தெரிந்தது தானே!

....

நேற்று நான் ஷேக்ஸ்பியர் 'மாக்பெத் ' வாசிக்க ஆரம்பித்து விட்டேன் !

இந்த இலட்சிய புனிதர்கள் ,பேனர் சிலுவை சுமப்பவர்களை எண்ணிப்பார்க்கையில் ஆயாசம் அதிகமாகி விடும்போது தான் உடனே உடனே ஷேக்ஸ்பியர் நாடகங்களை மீண்டும் மீண்டும் தேடும்படியாகி விடுகிறது .

If we tire of the saints, Shakespeare is our city of refuge.
-Emerson

இலங்கை தமிழ் மக்களின் தீராத சோகம் இப்படி சுய தம்பட்ட்ட ஆர்ப்பாட்ட ஆவேசங்களுக்கு, அரசியலுக்கு தீனியாகி விட்டது என்பது பழைய கதை தான்.

1 comment:

  1. RP Sir

    I saw this letter from Vanni on one of the websites..heart wrenching...

    வன்னியிலிருந்து வலியின் விழிம்பில் ஓர் கடிதம்.- "நலமுடன் இருக்கிறீர்களா? உலகத்தமிழர்களே!"
    உங்களில் ஒருவன் (கண்கள் நிறையக் கனவுகளோடும்,
    துள்ளி விளையாடிய கால்களில் ஷெல்அடித்த
    ரணங்களின் வலியோடும்
    அகதி முகாமில் வாடும்
    புலம்பெயர்ந்த ஈழக்
    குழந்தையின் கிழிந்து
    போன சட்டைப்பைகளில்
    இருந்த உடைந்த
    பென்சிலின்
    ஒட்டுத்துண்டில்
    இந்தக்கடிதம்
    எழுதப்படுகிறது)

    நலமுடன்
    இருக்கிறீர்களா? உலகத்
    தமிழர்களே?

    குண்டு விழாத
    வீடுகளில்,
    அமெரிக்காவுடனான
    அணுகுண்டு
    ஒப்பந்தத்தில்
    கையெழுத்திடுவது
    பற்றி அளவளாவிக்
    கொண்டிருப்பீர்கள்,
    இடைஞ்சலான நேரத்தில்
    கடிதம் எழுதுகிறேனா?

    எனக்குத் தெரியும்,
    என் வீட்டுக் கூரையில்
    விழுந்த
    சிங்களவிமானத்தின்
    குண்டுகள் என்னைப் போல
    பல்லாயிரக்கணக்கான
    தமிழ்க்குழந்தைகளை
    அநாதை ஆக்கிய
    போது, நீங்கள் எதாவது
    நெடுந்தொடரின்
    நாயகிக்காகக் கண்ணீர்
    விட்டுக்
    கரைந்திருப்பீர்கள்......

    என் அம்மாவும்
    அப்பாவும்
    அரைகுறையாய் வெந்து
    வீழ்ந்தபோது, உங்கள்
    வீட்டு
    வரவேற்ப்பறைகளில்
    அரைகுறை ஆடைகளுடன்
    அக்காமாரெல்லாம்
    ஆடும் " மஸ்தானா,
    மஸ்தானாவின்"
    அரையிறுதிச் சுற்று
    முடிவுக்கு
    வந்திருக்கும்.

    அண்ணனும், தம்பியும்
    நன்றாகப்
    படிக்கிறார்களா? அம்மா,
    அப்பாவின்
    மறைவுக்குப் பின்னால்,
    எனக்குத் தலை
    வாரிவிட்டு, பட்டம்மா
    வீட்டில்
    அவித்த இட்டலி
    கொடுத்துப் பள்ளிக்கு
    அனுப்பிய அண்ணனும்
    இப்போது இல்லை,
    நீண்ட தேடலுக்குப்
    பின்னர் கிடைத்த அவன்
    கால்களை மட்டும்
    மாமாவும்,
    சித்தப்பாவும்
    வன்னிக் காடுகளில்
    நல்லடக்கம்
    செய்தார்கள்......

    அப்போதே எழுத வேண்டும்
    என்று ஆசைதான் எனக்கு,
    நீங்கள் இலங்கை
    கிரிக்கெட்
    அணியின் இந்தியச்
    சுற்றுப் பயணத்தை, இரவு
    பகல் ஆட்டமாய்ப்
    பார்த்திருந்தீர்கள்....அதனால்
    தான் எழுதவில்லை.........

    ஒலிம்பிக் தீபத்தின்
    சுடர்களை உலகம்
    முழுவதும், என்னைப்போல
    ஒரு மலை
    நாட்டு திபெத்
    சிறுவனும், அவன்
    இனத்துப்பெரியவரும்
    சந்து பொந்தெல்லாம்
    மறித்துத் தடுத்தபோது,
    எனக்கு உங்கள் நினைவு
    வந்தது.....அதுமட்டுமல்ல,
    இந்திய அரசுகளின்
    உதவியோடு, இலங்கை
    ராணுவத்திற்கு நன்றி
    சொல்லும்
    திரைப்படச் சுருளின்
    பிரதிகளும் நெஞ்சில்
    நிழலாடியது.

    ஒரு பக்கம், இரங்கற்பா
    எழுதிக் கொண்டு,
    மறுபக்கம், நவீன
    ஆயுதங்களை
    அனுப்பி வைக்கும்
    உங்கள் கூட்டணித்
    தலைவர்கள் எல்லாம்
    நலமா தமிழர்களே?

    இன்னொரு முறை
    ஆயுதங்கள் அனுப்பும்
    போது மறக்காமல் ஒரு
    இரங்கற்பா
    அனுப்புங்கள், சாவின்
    மடியில் எங்களுக்கு
    ஒரு
    தமிழ்க்கவிதையாவது
    கிடைக்கும் அல்லவா?

    இன்னொரு தமிழகத்தின்
    மறைவான இடத்தில்
    நீங்கள் இலங்கை
    ராணுவத்திற்கு
    பயிற்சி அளிக்கும்
    போது, குழந்தைகளையும்,
    கர்ப்பிணிப்
    பெண்களையும்
    வலியின்றிக் கொல்வது
    பற்றி ஒரு
    வகுப்பெடுத்து
    விடுங்கள். கொஞ்சம்
    பாவமாவது
    குறையட்டும்.......
    மாஞ்சோலையில் ஒரு மாலை
    நேரத்தின் மங்கலான
    வெளிச்சத்தில்,
    தம்பியின்
    பிஞ்சு உடல்
    நான்கைந்தாய்
    சிதறடிக்கப்பட்ட அந்த
    கோர நாளில் நாங்கள்
    எல்லாம் கூட்டமாய்
    அழுது கொண்டிருந்தோம்,

    குழந்தைகள் இருக்கும்
    பள்ளிக்கூடங்களை
    தேடிக் கண்டு பிடித்து
    கொலை
    வெறியோடு உங்கள் "நேச
    நாட்டு" விமானங்கள்
    குண்டு மாரி பொழிந்த
    போது
    நீங்கள் இந்திய
    விடுதலையின் பொன்
    விழாக்
    கொண்டாட்டங்களுக்கான
    குறுஞ்செய்தி
    வாழ்த்துக்களில்
    களித்திருந்தீர்கள்,
    உலகத்
    தொலைக்காட்சிகளின்
    நீங்கள் பார்த்து
    மகிழும் முதன் முறைத்
    திரைப்படங்கள்
    தடை படுமே என்று தான்
    அப்போது எழுதவில்லை,

    எங்கள் இனப் போராளிகளை
    கொன்று குவித்து,
    நிர்வாணமாக்கி, இறந்த
    உடலுக்குக்
    கொடுக்கின்ற இறுதி
    மரியாதை இல்லாமல், எம்
    இறப்பை எள்ளி நகையாடிய
    உங்கள் "
    சார்க்"
    கூட்டாளியின் கொடிய
    முகம் கண்ட போதே எழுதி
    இருக்க வேண்டும்.

    அப்போது நீங்கள் கட்சி
    மாநாடுகளில் கவனமாய்
    இருந்தீர்கள்,
    பெண்களின்
    இடுப்பில் பம்பரம்
    விட்ட களைப்பில் கட்சி
    துவக்கிய
    கேப்டன்களின்
    பின்னால்
    அணிவகுத்து
    நின்றீர்கள், நீங்கள்
    போட்ட வாழ்க
    கோஷங்களின்
    இரைச்சலில்
    எங்கள் நிஜக்
    கேப்டன்களின்
    வீரமரணம் கேள்விக்
    குறியாய்க் கலைந்து
    போனது,
    தமிழர்களே?அப்பாவின்
    வயிற்றை அணைத்துக்
    கொண்டு, செப்பயான்
    குளத்தில்
    முங்கி எழுந்த
    நினைவுகளை மனதில்
    சுமந்து கொண்டு, வாரம்
    இரண்டு முறை
    அடிகுழாயில் அடித்து,
    அடித்து கொஞ்சமாய்
    ஒழுகும் தண்ணீர்
    நின்று
    போவதற்குள் ஓடி வந்து
    குளித்து விடுகிறேன்
    அகதி முகாமில்.

    முகாமின், தகரத்
    தடுப்புகளின்
    இடைவெளியில் தெரியும்
    பள்ளிக்கூடமும்,
    அதிலிருந்து வரும்
    மதிய உணவின் வாசமும்,
    அம்மாவின் மடியில்
    இருந்து,
    எப்போதும் கிடைக்கும்
    அன்பையும் எண் பழைய
    வாழ்வையும் நினைவு
    படுத்தும்.
    ஆயினும் பாழும் வயிறு,
    பசி கலந்த வலி கொடுத்து
    பாய்ந்து ஓடி
    வரிசையில்
    நிறுத்தி விடும்,
    அளந்து
    கொடுக்கப்படும்
    அவமானச்
    சோற்றுக்காய்.......

    அப்போதெல்லாம் எழுதத்
    தோன்றும் எனக்கு, ஆனால்
    நீங்கள் பீஸாக்
    கடைகளின்,
    வட்ட மேசைகளில்
    அமர்ந்து ஆங்கிலம்
    பேசிக்
    கொண்டிருந்தீர்கள்,
    எழுதத்
    தோன்றவில்லை.....எனக்கு....

    அமைதியாய் விடியும்
    பொழுதும்,
    அழகாய்க் கூவும்
    குயிலும்,
    தோகை விரிக்கும்
    மயிலும்,
    காதல் பேசும்
    கண்களும்,
    தாத்தா பிடித்த
    மீன்களில் அம்மா வைத்த
    குழம்பும்,
    தாமரை மலரின் தாள்கள்
    பறிக்க நாங்கள்
    குதித்த குளங்களும்,
    பக்கத்து வீட்டுப்
    பாண்டி அண்ணன் வேடு
    கட்டக் குவித்து வைத்த
    மணலும்,
    அதில் சங்கு பொறுக்கி
    விளையாடிய என்
    தம்பியின் கால்
    தடங்களும்,
    கருவேலன் காடுகளில்
    பொன் வண்டு பிடித்த என்
    பழைய நினைவுகளும்,

    இனிமேல் எனக்குக்
    கிடைக்கவே கிடைக்காதா
    உலகத் தமிழர்களே?

    எல்லோரும் சேர்ந்து
    மூட ஞானிக்கு எழுதிய
    நீண்ட கடிதமெல்லாம்
    வேண்டாம்
    அண்ணா, என்
    கேள்விகளில் எதாவது
    ஒன்றுக்கு, உங்கள்
    வீட்டில் கிழித்து
    எறியப்படும்
    நாட்காட்டித்
    தாள்களின்
    பின்புறமாவது பதில்
    எழுதுங்கள்,
    உலகத் தமிழர்களே........

    ஏனெனில் நீங்கள்
    எழுதப் போகும் பதிலில்
    தான் ஒரு இருண்டு போன
    இனத்தின்
    விடுதலையும், துவண்டு
    போன அகதிகளின்
    வாழ்க்கையின்
    மறுபிறப்பும்
    இருக்கிறது.

    வலி கலந்த
    நம்பிக்கைகளுடன்,
    உங்கள் தொப்புள்கொடி
    உறவு,
    தமிழீழத்திலிருந்து!

    முடிந்தால் உங்கள் ஊர் பத்திரிகைகளுக்கும், நண்பர்களுக்கும் இக்கடிதத்தை அறியத்தாருங்கள்!


    Regards
    Kannan

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.