Share

Feb 13, 2009

காதிலே விழுந்த சேதிகள்

1.யாரையும் பார்த்து இப்ப மலைக்கவே முடியலே .என்னடா ஒலிம்பிக்லே தங்கமா ,தங்கமா அள்ளுறான் .இவன் தாண்டா ஆம்பிளேன்னு மைக்கேல் பெல்ப்ஸ் பற்றி ரொம்ப ஆச்சரியப்பட்டாஇப்ப பெல்ப்ஸ் போதை கேஸ் நு சொல்றாங்கே.

2. முல்லைத்தீவு பகுதியிலே தப்ப முயற்சிக்கும் தமிழ் மக்களை விடுதலைப்புலிகள் தாக்கி கொலை செய்கிறார்கள் என்று ஒரு எழுபது வயதுக்கு மேற்பட்ட கன்னிகா ஸ்திரி காயத்துடன் வெளியேறி சொல்கிறார் .

3.கருணாநிதி குணமடைந்ததும் ராஜபக்ஷே அழைப்பை ஏற்று இலங்கை சென்று தமிழ் மக்கள் புனர்வாழ்வுக்கு ஆக்கப்பூர்வமாக பணி செய்ய முயற்சிக்கவேண்டும் என்று ஞாநி சொல்வதில் நியாயம் இருக்கிறது . எங்கோ இருந்து நார்வே காரன் வந்து சமரசம் பேசி அல்லாடி தவித்திருக்கிறானே.கருணாநிதி பஞ்சாயத்து பண்ணி பார்த்தால் என்ன என ஞாநி கேட்பதில் தவறே இல்லை.

4. ஆந்திர சட்டசபை , ஒரிஸ்ஸா சட்ட சபை , மேற்கு வங்காள சட்டசபை எம் எல் ஏ கலவரங்கள் பார்த்து பார்த்து .... என்னத்தை சொல்ல .சரி எல்லோருக்கும் கஷ்டம் . இவங்க கஷ்டம் வெளியே தெரியுது .

5. 'கப்பலை கட்டி விட்டு கரையிலே நிறுத்த வேண்டாம்னு தான் தேர்தலில் குதித்துதிருமங்கலம் தொகுதியிலே எண்ணூற்றி ஐம்பது வோட்டு அள்ளினோம்' .நு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மீசை முறுக்கி ' உங்க அப்பன் மகனே சிங்கம்டா' ன்னு அறிக்கை விட்டுட்டார்.

4 comments:

  1. நன்றி. ஞாநி

    ReplyDelete
  2. I am regular here. Visiting every single day.
    You're doing a fantastic job.
    Congratulations for crossing 300.

    ReplyDelete
  3. //நன்றி. ஞாநி//

    ஞாநி அவர்களே, நீ்ங்கள் எதையாவது படிக்காமல் விடுவதுண்டா? :)

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.