Share

Nov 16, 2008

"விளக்கேற்றியவள்" ஆதித்தன்

நேற்று இரவு ஒன்பது மணிக்கு மேல் திருப்பூர் சென்னை சில்க்ஸ் அருகில் ஒரு கடையில் சின்ன பர்ச்சேஸ் முடித்து விட்டு இறங்கும் போது எதிரே இருந்த சின்ன ஜவுளிகடையில் ரேடியோ பாட்டு கேட்டது .
"கத்தியை தீட்டாதே உந்தன் புத்தியை தீட்டு " டிஎம் எஸ் பாட்டு . 'விளக்கேற்றியவள் ' படத்தில் ஆதித்யன் என்ற நடிகர் கதாநாயகனாய் நடித்த பாட்டு.
சினிமா என்ற மாய உலகம் சிதைத்த நடிகர்களில் ஆதித்தனும் ஒருவர்.

பதினோரு வருடம் முன் இவர் காரைக்கால் பி எஸ் ஆர் சினிமா கொட்டகையில் டிக்கெட் கிழித்து கொடுத்துகொண்டிருந்தார் . இப்போது என்ன செய்கிறார் . இருக்கிறாரா ?
சிட்டாடல் அறிமுக நடிகர்கள் ஆனந்தன் (பிரகாஷ் ராஜ் மாமனார் ), ஜெய் சங்கர் , ஆதித்தன் ஆகியோர் . ஆனந்தன் படு செயற்கையான மூன்றாந்தர நடிகர் . நல்ல பிரபலமாகி பின்னால் ரொம்ப கஷ்டப்பட்டார் . டிஸ்கோ சாந்தி சம்பாரித்த பின் தான் சாகிற நேரத்தில் வழமை யை பார்த்தார் .
ஜெய் சங்கர் ஏராளமான டப்பா படங்களில் நடித்தே நிறைய சம்பாரித்தவர்.சினிமாப்படம் போரடிக்கும் என்பதே ஜனங்களுக்கு ஜெய் சங்கர் படங்களால் தான தெரிய வந்தது! 'குழந்தையும் தெய்வமும் ' 'பட்டணத்தில் பூதம் ' படங்களில் இவர் இருந்தார் . அந்த படங்களின் தரத்திற்கு நாகேஷ் தான் காரணம் .
பெயரும் தெரியாமல் ,காசும் பார்க்காமல் கடைசியில் தியேட் டரில் டிக்கெட் கொடுப்பது , கிழிப்பது , புரொஜெக்டரை ஆபரேட் பண்ணுவது என்று வறுமையை முழுமையாக அனுபவித்தவர் ஆதித்தன் . 'விளக்கேற்றியவள்' 1964படம்ஜோசப் தளியத் படம் . இதில் 'கத்தியை தீட்டாதே , உந்தன் புத்தியை தீட்டு , கண்ணியம் தவறாதே அதிலே கடமையை காட்டு ஆத்திரம் கண்ணை மறைக்கும் போது அறிவுக்கு வேலை கொடு " எம்ஜியார் பாணியில் புத்தி சொல்லி பாடிய ஆதித்யன் அதே 1964 வருடத்தில் வெளி வந்த தேவர் தயாரித்த " தாயும் மகளும் " என்ற படத்திலும் கதாநாயகன் !அடுத்து வில்லனுக்கு அடியாளாக 'காதல் படுத்தும் பாடு ' ,கொஞ்சம் காலம் கழித்து எம்ஜியாரின் படம் 'தனி பிறவி ' படத்தில் சின்ன வேடம் . உணர்ச்சியை காட்ட தெரியாத  நடிகர் ஆதித்தன் ! திரையுலகம் இவருக்கு அன்னியமானத்தில் ஆச்சரியம் ,,வருத்தம் ஒன்றும் இல்லை .

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.